districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பொய் வழக்கில் சிபிஎம் நிர்வாகி விடுதலை

ஈரோடு, அக்.30- பாஜகவினர் தூண்டுதலின் பேரில் போலீசார் புனைந்த பொய் வழக்கில், கொடுமுடி வட்ட மார்க்சிஸ்ட்  கட்சி நிர்வாகியை நீதிமன்றம் விடுதலை செய்தது.  ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஆகிய கட்சிகளின் சார்பில் விலைவாசி உயர்வு உள் ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைக ளைக் கண்டித்து வாகனப் பிரச்சாரம் செய்தனர். உரிய  முறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனு மதியுடன் வாகனப் பிரச்சாரம் சிவகிரியில் தொடங்கி யது. கொடுமுடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட இரண்டு  தாலுகா பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற  பிரச்சாரம் அன்று மாலை 5.30 மணி அளவில் கொடுமுடி  அருகே உள்ள ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்றது. அப்போது ஒத்தக்கடை பகுதியைச் சார்ந்த மோகன்ராஜ்  என்பவர் பிரச்சாரத்திற்கு இடையில் புகுந்து தகராறு  செய்து தாக்க முற்பட்டார். காவல்துறை அனுமதியுடன்,  நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் புகுந்து இடையூறு  செய்ததாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.   இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அன்றைய கொடுமுடி-மொடக்குறிச்சி தாலுகாச் செய லாளர் கே.பி.கனகவேல் கொடுமுடி காவல் நிலையத் தில் புகார் செய்தார். இந்த புகாரை பதிவு செய்த போலீசார், அதேநேரத் தில் பாஜகவின் தூண்டுதலின் பேரில் மார்க்சிஸ்ட் கட்சி யின் நிர்வாகியின் மீதும் போலியாக புகார் தயாரித்து  வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு கொடுமுடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த  வழக்கை இலவச சட்ட உதவி மையத்தின் உதவியுடன் வழக்கு எதிர்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ 51  வாய்தாக்கள் பெற்ற வழக்கில் புதனன்று தீர்ப்பு அளிக் கப்பட்டது. தீர்ப்பில் பொய் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்று தள்ளுபடி செய்து  கனகவேல் விடுவிக்கப்பட்டார்.   அதேசமயம் சிபிஎம், சிபிஐ கட்சிகள் நடத்திய பிரச் சார இயக்கத்திற்கு இடையூறு செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை நிலையிலேயே உள் ளது.

ரூ.4 கோடியில் வளர்ச்சித்திட்டப்பணிகள் தருமபுரி நகர்மன்ற கூட்டத்தில் ஒப்பதல்

தருமபுரி, அக்.30- தருமபுரி நகரில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள, நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தருமபுரி நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி அலுவ லக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்டரங்கில் திங்க ளன்று, நகர்மன்றத் தலைவர் லட்சுமி மாது தலைமை யில் நடைபெற்றது. துணைத்தலைவர் நித்யா அன்பழ கன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் சேகர்,  கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து பேசினார். அப்போது, தருமபுரி நகரில் மொத்தம்  33 வார்டுகள் உள்ளன. இதில் ஏற்கெனவே 19 வார்டுக ளில் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  மீதமுள்ள 14 வார்டுகளில் ரூ.81.15 கோடி மதிப்பீட்டிலான புதை சாக்கடை திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த  இடையூறும் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற  அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் தெரு நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரி செய்ய தெருவிளக்குகளை உடனடியாக பழுது பாா்க்க  வேண்டும் என என நகர்மன்ற உறுப்பினர்கள் வலியு றுத்தி பேசினர். இக்கூட்டத்தில், தருமபுரி நகரில் மேல்நிலைத் நீர்த் தேக்க தொட்டிகள் அமைந்துள்ள பகுதிகளில் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்துவது, குடிநீர் பணிகள், சாலைப் பணிகள், கழிவுநீர் ஓடை வசதி, கான்கிரீட் சாலை  அமைப்பது என மொத்தம் 49 பொருள்கள் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அனைத்து தீர் மானங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தருமபுரி நகரில் ரூ. 4 கோடி மதிப்பீட்டிலான  வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கஞ்சா வியாபாரிகளிடம் பணம் வாங்கிய உதவிய காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை, அக்.30- கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு உதவியது டன், அவர்களிடம் ஆன்லைன் மூலம் 2000 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிய இரண்டு காவலர்கள் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டனர். கோவை மாநகரில் கல்லூரி மாணவர்களை குறி  வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கணேசன்  மற்றும் முத்துக்குமார் என்ற இருவரை காவல் துறையி னர் பிடித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் விசா ரணை மேற்கொண்டு வந்தனர். கஞ்சா வியாபாரி களான கணேசன், முத்துக்குமாரிடம் மேற்கொண்ட விசா ரணையில் தென் மாவட்டங்களில் இருந்து கஞ்சா கோவைக்கு கடத்தி கொண்டு வரப்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து கோவைக்கு கஞ்சா கடத்தி கொண்டு வரும் கும்பலை இவர்கள் மூலம் பிடிக்க போலீ சார் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், தென்மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தும் கும்பல் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பியது.  சரியாக திட்டமிட்டு இருந்த நிலையில், அவர்களை பிடிக்க திட்டமிடுவது எப்படி கஞ்சா கடத்தல் கும்ப லுக்கு தெரியவந்தது என்பது தனிப்படை போலீசா ருக்கு அதிர்ச்சியாக இருந்தது.  இது குறித்து காவல் துறையினர் விசாரணை  மேற்கொண்ட போது, பணியில் இருந்த காவலர்களிடம் செல்போனை வாங்கி கணேசன், முத்துக்குமார் ஆகி யோர், கஞ்சா கடத்தல் கும்பலுக்கு தகவல் தெரிவித்துள் ளனர். போலீசாரிடமே செல்போனை வாங்கி போலீ சார் பிடிக்க திட்டமிட்டு இருக்கும் தகவலை சொல்லி  இருப்பதும் தெரியவந்தது. போலீஸ் பிடியில் இருந்த இரு கஞ்சா வியாபாரிகளி டம் 2000 ரூபாய் ஆன்லைன் பணம் அனுப்புதல் (GPay)  மூலம் வாங்கிக்கொண்டு, பணியில் இருந்த போலீசாரே  செல்போனை கொடுத்து உதவியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, கோவை ராமநாதபு ரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள்  ரவிசேகர் மற்றும் மாயசுதாகர் ஆகிய இருவரையும் பணி யிடை நீக்கம் செய்து துணை ஆணையர் சரவணக்கு மார் உத்திரவிட்டார். கஞ்சா வியாபாரிகளுக்கு உதவி யதுடன், அவர்களிடம் பணம் வாங்கிய இரண்டு காவலர் கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோழிப்பண்ணையை மூடக்கோரி முற்றுகை

கோபி, அக்.30- கவுந்தபாடி அருகே சுகாதாரமின்றி இயங்கி வந்த கோழிப்பண்ணையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் முற்று கையில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அடுத்த கவுந்தபாடி பகுதியில்  கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனி யார் கோழிப்பண்ணை இயங்கி வரு கிறது. இந்நிலையில் கோழிப்பண்ணை யில் கடந்த சில வருடங்களாக கோழி  கழிவுகள் அகற்றபடாமல் சுகாதாரமற்ற  முறையில் இயங்கி வந்த்தால், குடியி ருப்பு பகுதிகளில் ஈக்கள் தொல்லை  அதிகரித்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது.  இதனால், அருகாமையில் உள்ள குடியி ருப்பு வாசிகள் மற்றும் விவசாயிக ளுக்கு சுவாச கோளாறுகள் உள்ளிட்ட  பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி  வருகின்றனர். மேலும், கோழி கழிவு நீரை நிலத்தடியில் வருடக்கணக்கில் தேக்கி வைத்துள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவ சாய பணிகளை மேற்கொள்ள முடியா மல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.  இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத் திற்கு பொதுமக்கள் மனு அளித்தும்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், திங்களன்று சுகாதார மின்றி இயங்கும் கோழிப்பண்ணையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கோழிப் பண்ணையை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறை, ஊரக வளர்ச்சிதுறை, கால்நடை துறை, மாசுகட்டுப்பட்டு வாரிய உள் ளிட்ட அதிகாரிகள் கோழப்பண்ணை யில் ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வின் போது கோழிப்பண்ணையில் கோழிகழி வுகள் அகற்றப்படாமல் ஈக்கள் தொல்லை அதிகரித்து  சுகாதாரமின்றி  இயங்கி வந்தது உறுதி செய்யப்பட்டது.  மேலும், நாள்பட்ட கோழகழிவுகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்தது குறித்தும்  ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து நடவடிக்கை மேற் கொண்ட அதிகாரிகள் தெரிவிக்கையில் கோழிப்பண்ணை சுகதாரமின்றி இயங்கி வந்த்தால் ஈக்கள் தொல்லை அதிகரித்து பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதால், சுகாதாரமின்றி இயங்கி வரும் கோழிப் பண்ணை இப்பகுதியில் இயங்குவதற் கான சூழல் இல்லை என்பதை மாவட்ட  நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று 15 நாட்களுக்குள் உரிய நடவ டிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி  அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், புதனன்று ஊராட்சி நிர்வாகம்  சார்பில்  சுகாதார மற்ற முறையில் கோழிப் பண்ணை செயல்பட்டுள்ளது எனவே பண்ணை இயக்க கூடாது என நோட்டீஸ்  ஒட்டப்பட்டது.

விசைத்தறித் தொழிலாளர்களுக்கு போனஸ் உயர்வு ஒப்பந்தம் அமல்

நாமக்கல், அக். 30- பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கான போனஸ்  ஒப்பந்தம் நடைமுறைப்படுத் தப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையத்தில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண் பெண் தொழிலாளர்களுக்கும் கடந்த எட்டு வருடங்களாக  9.50 %  சதம் போனஸ் வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், கடந்த அக்டோபர் மாத துவக்கத்தில் விசைத்தறி தொழி லாளர் சங்கத்தின் சிறப்பு மகாசபை யில், 2023 ,2024 ஆம் ஆண்டுக்கு 20%  போனஸ் கேட்பது, 15 நாட்களுக்கு  முன்பாகவே போனஸ் தொகை  வழங்க வேண்டும் என வலியுறுத்து வது என முடிவெடுக்கப்பட்டது. இத னையடுத்து, விசைத்தறி ஜவுளி உரிமையாளர் சங்கத்திற்கும் அரசு  அதிகாரிகளுக்கும் மனு அனுப்பினர்.  இதனையடுத்து, எவ்வித நடவ டிக்கை எடுக்கப்படாத நிலையில், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தி னர் தொடர்ந்து பல்வேறு போராட் டங்களை மேற்கொண்டனர். இந்நிலையில் பள்ளிபாளையம் தேவாங்கபுரத்தில் விசைத்தறி உரி மையாளர்கள் மற்றும் தொழிற்சங்க  நிர்வாகிகளுக்கும் இடையே நடை பெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தை  முடிவில் விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு 2023 - 2024 ஆம் ஆண்டிற்கு 9.75  சதம் தீபாவளி போனஸ் வழங்குவ தென உடன்பாடு ஏற்பட்டது. இந்த  உடன்பாடு ஐந்து ஆண்டுகளுக்கு  அமலில் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தின் காரண மாக சுமார் ஒரு லட்சம் கூலி பெறும்  தொழிலாளர்கள் ரூ.9750 போனஸ் பெறு வார்கள் என சங்க நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர். தீபாவளி போனஸ்  உயர்வு காரணமாக பல்லாயிரக்க ணக்கான  தொழிலாளர்கள் இத னால் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஐடிஐ மாணவர் சாதனை

உடுமலை,அக்.30- உடுமலைப்பேட்டை அர சினர் ஐடிஐ மெக்கானிக் மோட்டார் வெஹிக்கில்  தொழிற்பிரிவில் பயின்ற மாணவன் இஷாக் அகமது ஷெரிப் (1168/1200) மதிப் பெண் பெற்று மாநிலத்தி லேயே முதல் இடம் பெற்று, சாதனை படைத்துள்ளார்.

மழை நீரை சேமிக்க விவசாயிகள் வலியுறுத்தல்.

மழை நீரை சேமிக்க விவசாயிகள் வலியுறுத்தல் உடுமலை,அக்.30- மழைக்காலங்களில் வீணாகும் மழை நீரை சேகரிக்கும் வகையில், நீர் வழித்தடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண் டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளார்கள். உடுமலை, மடத்துக்குளம் விவசாய நிலங்கள் கொண்டதா கவும், பெரும் பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழி லாக உள்ளது. இப்பகுதிகளில் அமராவதி, திருமூர்த்தி அணை களில் இருந்து மண்டல வாரியாக பிரித்து விவசாய நிலங்க ளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த வருடம் பருவ மழை பெய்யாததால் அணைகள் திறக்கப்பட வில்லை கடுமை யான வறட்சி ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் தென்னை  மரங்களை காப்பாற்ற லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். வசதி யில்லாத விவசாயிகளின் தென்னை மரங்கள் காய்ந்து போய்  மிகப்பெரிய இழப்பை சந்தித்தனர். ஆனால் இம்மாதம் முதலே  பருவ மழை சீராக பெய்ததால் அனைத்து நீர் வழித்தடங்களி லும் மழைநீர் சென்றது. இந்நிலையில் நீர் வழித்தடங்களில் தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேகரிக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளார்கள்.

இறுதிச் சடங்கு உதவித்தொகை வழங்க லஞ்சம் தாசில்தார் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

உதகை, அக்.30- இயற்கை மரண இறுதிச் சடங்கு உதவித் தொகை வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் தாசில்தார் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா தங்காடு பகுதியை சேர்ந்தவர்  நாராயணன், இவர்  உதகையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரி யராக பணியாற்றி வந்தார். இதற்காக உதகை  நொண்டிமேடு பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், இவருடைய தந்தை ஆலு குட்டி 2010 ஆம் ஆண்டு இயற்கை மரணம்  அடைந்தார். இதனையடுத்து, சமூக பாது காப்பு திட்டத்தின் கீழ், இயற்கை மரணம்  மற்றும் இறுதி சடங்கு செலவு உதவித் தொகை வாங்குவதற்காக, குந்தா தாசில்தார்  அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார். ஆனால், பணம் கொடுக்காமல் பல நாட்க ளாக இழுத்தடிக்கப்பட்டது. இதுகுறித்து பல முறை அவர் நேரில் வந்து கேட்டும் சரியான  பதில் கிடைக்கவில்லை. மேலும், அப்போது அங்கு தாசில்தாராக பணியாற்றிய கனகம், தற்காலிக இளநிலை உதவியாளர் சாஸ்திரி ஆகியோர், லஞ்சமாக பணம் கொடுத்தால் பணி விரைவில் முடிக்கப்படும் என்று கூறி உள்ளனர். ஆனால், லஞ்சப் பணம் கொடுக்க விருப் பம் இல்லாத நாராயணன். இதுகுறித்து லஞ்ச  ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரி வித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் சுதா கர், ஆய்வாளர் உன்னிகிருஷ்ணன் ஆகி யோர் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 1-11-2010 ஆம் ஆண்டு  ரசாயனம் தடவிய ரூ.1000  பணத்தை தாசில்தார் கனகம், ரூ.500- பணத்தை சாஸ்திரி ஆகியோர் நாராயணனிடம் இருந்து வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். இதன்பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் புதனன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதன்படி குற்றம் சாட்டப்பட்ட தாசில்தார் கன கம் மற்றும் தற்காலிக இளநிலை உதவி யாளர் சாஸ்திரி ஆகிய 2 பேருக்கு 3 ஆண்டு  சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபரா தமும் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தர விட்டார். இதன் பின்னர் இவர்கள் இருவ ரும் கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப் பில் ரேணுகா கார்த்திகேயன் ஆஜராகி வாதா டினார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

சேலம், அக்.30- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புத னன்று நிலவரப்படி வினாடிக்கு 16,568 கன அடியாக சரிந்தது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில்  பாசனத்தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத் திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினா டிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. புதனன்று காலை மேட்டூர்  அணையின் நீர்மட்டம் 108.22 அடியில் இருந்து 108.55 அடியாக உயர்ந்துள் ளது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில்  மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினா டிக்கு 14,273 கன அடியிலிருந்து வினா டிக்கு 10,568 கனஅடியாக சரிந்துள் ளது. டெல்டா பாசன தேவை அதிகரித் துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினா டிக்கு 2,500 கன அடியிலிருந்து வினா டிக்கு 12,000 கன அடியாக அதிகரிக் கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாச னத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகி றது. அணையின் நீர் இருப்பு 76.29 டிஎம்சியாக உள்ளது.


.