திருப்பூர், ஜூலை 8- 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்க ளுக்கு முறையாக வேலை வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊத்துக் குளி, அவிநாசி ஆகிய பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கப்படவில்லை. வேலை அட்டை வைத்துள்ள தொழிலாளர்கள் முறை யாக அனைவருக்கும் வேலை வழங்க வேண் டும். கடந்த மூன்று மாதமாக வேலையில்லா காலத்திற்கு சட்டப்படியான இழப்பீடு தொகை வழங்க வேண்டும். சட்டக்கூலி ரூ.319 ஐ முழுமையாக வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் வேலைக்கான நிர்வாக அனுமதியை வழங்க ஒன்றிய, மாவட்ட நிர் வாகம் கால தாமதம் செய்யக்கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங் களன்று ஊத்துக்குளி தாலுகா, அவிநாசி ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஊத்துக்குளி: ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் ஆர்.மணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கு.சரஸ்வதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் க.பிரகாஷ், வி.காமராஜ் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி உரையாற்றினார்கள். தாலுகா குழு உறுப்பினர்கள் லெனின், சிவ ராஜ், குன்னத்தூர் கிளைச் செயலாளர் சின்னச்சாமி உட்பட ஏராளமான 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலரி டம் தொழிலாளர்கள் 223 தனித்தனியான மனுக்கள் அளித்தனர். அவிநாசி: அவிநாசியில் நூற்றுக்கும் மேற்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் திங்களன்று மனு அளித்தனர். இந்நிகழ்வில், கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ராஜன், தேவி, கருப் புசாமி, குமாரசாமி, மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர் கள் ரங்கசாமி, அய்யம்மாள், தீபா, கிளைச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.