districts

img

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி தருமபுரி ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை

தருமபுரி, ஆக 5- அடிப்படை வசதியின்றி தவிக்கும் ரெட்டி யூர் கிராமத்திற்கு தேவையான, வசதி களை செய்து கொடுத்திட வேண்டும் என தருமபுரி ஆட்சியர் கி.சாந்தியிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்களன்று மனு அளித்தனர்.  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் எர்ரண அள்ளி ஊராட்சிக்குபட்டது ரெட்டியூர் கிராமம். இங்கு ஏராளமான இஸ்லாமிய குடும் பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2008 ஆம் ஆண்டு, வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வருவாய்துறை அளித்த இலவச வீட்டுமனை பட்டாவை பெற்று வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.  இக்குடியிருப்பு பகுதிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. போர்வெல் பழுத டைந்து தண்ணீர் வந்து பல நாட்கள் ஆன பின்னும் இதுவரையில் சரிசெய்யவில்லை. ஒகேனக்கல் குடிநீரும் இங்கு வருவதில்லை. குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய கிண றுகளுக்கு சென்று எடுத்துவர வேண்டியுள் ளது. கழிவுநீர் வெளியேற முறையான வடி கால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையி லேயே தேங்கி விடுவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குழந்தைகள் உள்ளிட்ட பல ருக்கும் பேதி, காய்ச்சல் போன்றவற்றால் அவதியுறுகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் நிலையை உணர்ந்து ஆட்சியர் உடனடியாக கவனம் செலுத்தி, இப்பகுதி யில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், எங்கள் பகுதியில் எந்த அடிப்படை வசதி களும் செய்து தரப்படவில்லை. ஊராட்சி மன்றத் தலைவரிடம் கோரிக்கை வைத்தால், நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை, எனவே எந்த வசதிகளும் செய்து தரமுடியாது என்கி றார். எங்களின் பொது தேவைக்காக ஒதுக்கப் பட்ட 25 சென்ட் இடத்தை தனிநபர் ஆக்கிர மிப்பு செய்துள்ளனர். இது பொது தேவைக் கான இடம் என தெரிவித்தால் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மிரட்டுகின்றனர். இந்த இடத்தை மீட்டு பொது சுகாதார வளா கம் மற்றும் அரசு தொடக்கப்பள்ளி கட்டிக் கொடுக்க வேண்டும். முறையான தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே, இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கவனத்திற்கு கொண்டு சென்று ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள் ளோம் என்றார்.  முன்னதாக ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச்செயலாளர் டி.எஸ்.ராமச் சந்திரன், வட்டக்குழு உறுப்பினர் காரல் மார்க்ஸ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.