districts

img

கடன் மேல் கடன் வாங்கி மக்கள் தலையில் சுமத்துவதா?

திருப்பூர், ஜன. 31 – திருப்பூர் மாநகராட்சியில் பாதாளச்  சாக்கடை பணிக்கு கடன் பத்திரம் மூலம்  ரூ.100 கோடி, குடிநீர் திட்டத்துக்கு டுபிட்கோ நிறுவனத்தில் ரூ.40 கோடி  கடன் என மக்கள் தலையில் சுமை களை சுமத்தக்கூடிய விதத்தில் கடன் பெறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளியன்று நடை பெற்ற திருப்பூர் மாமன்றக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் ஆர்.மணி மேகலை கட்சியின் எதிர்ப்பைப் பதிவு  செய்தார். மேயர் மற்றும் ஆணையரி டம் கொடுத்த கடிதத்தில் கூறியிருப்பதா வது:  கடன் பத்திரத்தில் நிதி திரட்டுவதா? திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட் டத்தில் மன்றப் பொருள் எண்: 559இல்,  அம்ரித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிக்கு, ரூ.100 கோடி தொகையை மாநகராட்சி கடன் பத்திரம் மூலம் திரட்டுவது என்று  முன்வைக்கப்பட்டு உள்ளது. பங்குச் சந்தையில் கடன் பத்திரம் மூலம் நிதி  திரட்டுவது என்றும், கடன் கொடுக்கும்  முதலீட்டாளர்களுக்கு மாநகராட்சியின்  சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்  வரி, குப்பை வரி மற்றும் வரி அல்லாத வருவாய் இனங்களில் மாநகராட்சி பெறக்கூடிய வருமானத்தையும் சொத் துக் காப்பீடாக வைப்பது என்றும் முன் மொழியப்பட்டுள்ளது. மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டிய உள்ளாட்சி நிர் வாகத்தின் கடமைகளுக்கு, பங்குச் சந்தையில் கடன் பத்திரம் மூலம் நிதி திரட்டுவது கொள்கை அடிப்படையில் தவறான முடிவாகும். எனவே இந்தத்  தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய் கிறது.  இந்த முடிவு மாநகராட்சி நிர்வாகம் தனது சொந்த இறையாண்மையைக் கைவிட்டு, மென்மேலும் பன்னாட்டு நிதி முதலீட்டாளர்களை சார்ந்திருக்கச் செய்வதாகும். இது வாக்களித்து தேர்வு  செய்த சொந்த மக்களின் ஜனநாயக உரிமையை பறிப்பது ஆகும். மேலும்  அடிப்படை வசதிகளை பெறுவதற்கு இங்கு வாழும் மக்கள் தொடர்ந்து அதிக ரிக்கும் கட்டணச் சுமையில் சிக்கிக் கொள்வார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது. இருட்டடிப்பு செய்ய ஆங்கிலத்தில் தருவதா? அதேபோல் மன்றப்பொருள் 658 இல், அம்ரித் திட்டத்தில் குடிநீர் மேம் பாட்டு பணிகளுக்கு, தமிழ்நாடு நகர்ப் புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி  கழ கம் (டுபிட்கோ) நிறுவனத்தில் இருந்து  ரூ.40 கோடி கடன் பெறவும் தீர்மானம்  முன்வைக்கப்பட்டு உள்ளது. இந்த தீர் மான முன்மொழிவில் சொல்லப்பட் டுள்ள நிபந்தனைகள் ஆங்கில மொழி யில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கடு மையான நிபந்தனைகளை, மக்கள்  பிரதிநிதிகளான மாமன்ற உறுப்பினர் கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளக் கூடாது என்று இருட்டடிப்பு செய்யும்  நோக்கத்தில் உள்ளது. இதை தாய் மொழித் தமிழில் முழுமையாக கொடுக் காதது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, குப்பை வரி மற்றும் குடிநீர்  கட்டணம் ஆகியவை திருப்பூர் மக்க ளுக்கு பெரும் சுமையாக உள்ளது.  இந்நிலையில் கூடுதல் கடன் பெறுவ தும், அதற்கான நிபந்தனைகளும் சாமா னிய மக்களை மேலும் நெருக்கடிக் குள் தள்ளும். எனவே இந்த தீர்மானத் தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  எதிர்க்கிறது. சிறப்பு நிதி பெறுக! மாநகராட்சியில் குடிநீர், பாதாள சாக்கடை ஆகிய அடிப்படை வசதி களை மக்களுக்கு செய்து தர வேண்டும்  என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக தனியார் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கடனை நம்பி செல் வது இங்குள்ள மக்களுக்கு கடன் நெருக்கடியைத் தான் அதிகரிக்கும். எனவே மன்றப் பொருள் எண் 559 மற் றும் 658 ஆகிய இரண்டையும் கைவிட்டு  ரத்து செய்ய வேண்டும்.  இதற்கு மாற்றாக ஏற்றுமதி மூலம் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி ஈட்டி தருவதுடன், உள் நாட்டுச் சந்தையிலும் ரூ.20 ஆயிரம் கோடி ஈட்டி தரும் திருப்பூர் மாநக ராட்சியில் மக்களுக்கு அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு, ஒன்றிய அரசும், மாநில அர சும் இந்த நகர வளர்ச்சிக்கு தேவை யான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து தர  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இந்த நகரம் ஈட்டித்தரும் ரூ. 60 ஆயிரம் கோடியில், ஒன்றிய அர சும், மாநில அரசும் சேர்ந்து குறைந்தபட் சம் 1 சதவிகிதம் அளவுக்கு உதவி செய் தாலே ரூ.600 கோடி கிடைக்கும். அதைக்  கொண்டு தாராளமாக வளர்ச்சி பணி களை செய்ய முடியும்.  நிரந்தர மருத்துவர் நியமித்துடுக! மன்றப்பொருள் 628 இல், மாநக ராட்சி இரண்டு நகர் நல மையங்களில் தலா இரண்டு மருத்துவர்கள் வீதம் அயல் பணி (அவுட்சோர்சிங்) மூலம் நிரப்புவதற்கு ஒரு மருத்துவருக்கு மாத  ஊதியம் ரூபாய் 70 ஆயிரம் என்ற வீதம்  மாதந்தோறும் நால்வருக்கு ரூபாய் 2  லட்சத்து 80 ஆயிரம் வீதம் ரூ.8.40 லட்சம்  தருவதற்கும் தீர்மானம் முன்மொழியப் பட்டுள்ளது. இந்த இரண்டு நக நல  மையங்கள் மட்டுமின்றி, மாநகராட்சி யில் உள்ள அனைத்து நகர் நல மையங் களிலும் தேவையான மருத்துவர்களை, மருத்துவ பணியாளர்களை நிரந்தரப்  பணி அடிப்படையில் நிரப்ப வேண்டும்.  மக்களுக்கு தேவையான அடிப்படை சுகாதார வசதி தொடர்ந்து தாமத மின்றிக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்.மணி மேகலை வலியுறுத்தி கேட்டுக் கொண் டார்.