நெய்யாற்றின்கர (கேரளம்), நவ. 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநாடுகள் கேரள மாநிலத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. கிளை மாநாடுகள் நிறைவு பெற்று பகுதி மாநாடுகளில் பெரும் உற்சாகத்துடன் கட்சியினர் பங்கேற்று வருகின்றனர். பகுதி மாநாடுகளிலும் பல்வேறு தலைப்புகளில் கருத்த ரங்குகள், ஊர்வலங்கள், செந்தொண் டர் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வு கள் மக்களை ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள - தமிழகத்தின் எல்லையோரம் உள்ள நெய்யாற்றின் கர ஏரியா மாநாடு, நெய்யாற்றின்கர யில் நவம்பர் 16, 17, 18, 19 ஆகிய நான்கு நாட்கள் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. இம்மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தேசாபிமானி நாளிதழின் ஆசிரியருமான புத்த லத்து தினேஸன் உரையாற்றினார். முன்னதாக நவம்பர் 16 அன்று மாலை கோமளம் நகரில் கலாச்சார மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை துவக்கி வைத்து காயத்ரி வர்ஷா உரையாற்றினார். நவம்பர் 18 அன்று நிறைவுபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் கட்சியின் நெய்யாற்றின்கர ஏரியா செயலாள ராக மீண்டும் டி.ஸ்ரீகுமார் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில் கட்சியின் மாநில மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத் தலைவர்கள் ஆனாவூர் நாகப்பன், வி.ஜோயி எம்எல்ஏ., கடகம்பள்ளி சுரேந்திரன் எம்எல்ஏ., டி.என்.ஸீமா, சி.அஜயகுமார், என்.ரதீந்திரன், பி.பி.முரளி, டி.கே.முரளி எம்எல்ஏ., ஆர்.ராமு, சி.கே.ஹரீந்திரன் எம்எல்ஏ., கே.ஆன்ஸலன் எம்எல்ஏ., ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டின் நிறைவாக நவம்பர் 19 தோழர் கோடியேரி பால கிருஷ்ணன் நகரில் பல்லாயிரக்கணக் கான மக்கள் சங்கமிக்கும் பொது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை கே.டி. குஞ்ஞிக் கண்ணன் துவக்கி வைத்து உரை யாற்றினார். தீக்கதிர் சிறப்பிதழ் இம்மாநாட்டையொட்டி தீக்கதிர் நாளிதழின் சிறப்பிதழை, மாநாட்டு அரங்கில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் புத்தலத்து தினேஸன் வெளியிட, மாவட்டச் செயலாளர் வி.ஜோயி எம்எல்ஏ., பெற்றுக் கொண்டார்.