நாமக்கல், செப்.5- அரசுப்பள்ளிக்குள் புகுந்து சமையலறை சுவர்களில் மலத்தை பூசிய சமூக விரோதிகளின் செய லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், எருமப் பட்டி பேரூராட்சியில் அம்பேத்கர் நகர் பகுதியில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த ஞாயிறன்று பள்ளி சமையலறை சுவர்களில் மலம் பூசிய அராஜகம் நடந்தேறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சார்பில் இந்த அராஜகத்தை கண் டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிந்திட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக் கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி மற்றும் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட் டத் தலைவர் பி.செல்வராஜ், மாவட் டச் செயலாளர் கி. தங்கமணி கட்சி யின் நாமக்கல் பிரதேச குழு செய லாளர் ராஜேந்திரன் குழு உறுப்பி னர், சிவச்சந்திரன், கிளைச் செய லாளர் ஜெயராமன் உள்ளிட்ட குழு வினர் கடந்த புதனன்று பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இது போன்ற சம்ப வங்கள் ஏற்கெனவே அங்கு நிகழ்ந் துள்ளது. குறிப்பாக பள்ளி துவங் கிய சில நாட்களிலேயே இங்குள்ள மாணவர்கள் பயன்படுத்தும் இரண்டு கழிவறைகளுக்கு இடையிலுள்ள தண்ணீர் தொட்டியில் மலம் கழித்து சிலர் அசுத்தம் செய்துள்ளனர். எளிய மாணவர்கள் குறிப்பாக பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளி யில் இத்தகைய சம்பவங்கள் நிகழ் வதும் இது குறித்து தரப்பட்ட புகார் கள் மீது பள்ளி நிர்வாகமும், கல்வி அலுவலர்களும் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்வி அலுவலர் அலுவல கம் ஜே.சி.பி இயந்திரம் வருவதற் காக, பள்ளியின் தெற்கு பகுதி சுற் றுச்சுவர் 5 மீட்டர் நீளத்திற்கு உடைக் கப்பட்டது. இன்று வரை அது கட்டப் படாமல் இருப்பதும் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது. இத்த கைய நிலைக்கு உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி துறையின் பொறுப் பற்ற அணுகுமுறைகளும் காரண மாகும். இது குறித்த விசாரணையை விரைவுபடுத்தி சம்பந்தப்பட்ட குற் றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனையை உறுதி செய்ய வேண் டுமெனவும், பொதுமக்களை வலு வாக திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து நேரடி நடவ டிக்கையில் ஈடுபடுமென்று தெரி வித்துள்ளனர். இதேபோன்று, தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் ம..கலைச் செல்வன், எருமப்பட்டி வட்டார அமைப்பாளர் மு.சீ. நல்லமுத்து ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாக சீர்கேட்டால், எருமப்பட்டி அரசுப்பள்ளி சமையலறையில் சமூக விரோதிகள் மலம் பூசியுள்ள னர். எனவே, வட்டார தொடக்கப்பள்ளி கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் வியாழ னன்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்க ஒன்றியத் தலைவர் நவீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் தங்கராஜ், மாவட்டச் செயலாளர் சரவணன், மாநிலக்குழு உறுப்பினர் யாழினி, ஒன்றியச் செயலாளர் தனுஷ், துணைத்தலைவர் ராகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.