districts

img

சிபிஎம் கோவை மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

கோவை, நவ.8- மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம் வியாழனன்று நடை பெற்றது.  மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு டிசம் பர் 22,23 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இம்மா நாட்டை சிறப்பாக நடத்திட வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் மற்றும் நவம்பர் புரட்சிதின பேரவை கோவை வரத ராஜபுரம் சக்கரையார் மண்டபத்தில் நடைபெற்றது. பீளமேடு நகரக்குழு செயலாளர் கே.பாண்டியன் தலைமை தாங்கி னார். சிங்கை நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி வரவேற்றார். நிகழ்வில் மாநில செயற்குழு என்.குணசேகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு தலைவராக கே. மனோகரன், செயலாளராக வி.தெய்வேந்திரன், பொருளா ளராக கே.பாண்டியன் உள்ளிட்ட 76 பேர் கொண்ட வர வேற்புக்குழு அமைக்கப்பட்டது.  முன்னதாக நவம்பர் புரட்சிதின பேரவையில் பங் கேற்று, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் என்.குணசேகரன் பேசுகையில், இந்தியாவில் பாட்டாளி வர்க்கம் எத்தகைய திசையில் பயணிக்க வேண்டும் என் பதை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடுகள் தீர்மானிக்கும். சில பேர் கட்சியை ஆரம்பித்து விட்டு பல மாதம் கழித்து கொள்கை என்ன என்று அறிவிக்கிறார்கள். அந்த கொள்கையை அறிவிப் பதற்கு கொள்கை விளக்க மாநாடு என்று நடத்துகிறார்கள். அவர்களைப்பொருத்தவரையில் மாநாடு என்பது  கும்பமே ளாவை போன்றது. கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்த வரை மாநாடுகள் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்க்கை யில் மிக முக்கியமான தருணம், அதி முக்கியமான சந்தர்ப் பம். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு என்பது நம்மை நாம் பரிசீலித்துக் கொள்ளும் ஒரு நிகழ்வு என்றார். கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் பேசுகையில், நவம் பர் புரட்சிக்கு முன்னர் மார்க்சியத்தை வறுமையின் தத்து வம் என்றார்கள். சிலர் முதலாளிகளை பார்த்து பொறாமைப் படுகிற பொறாமையின் தத்துவம் என்றார்கள். ஆனால் மார்க் சியம் உழைப்பாளி வர்க்கத்தின் தத்துவம் என நவம்பர் புரட்சி யின் மூலம் லெனின் உலகுக்கு நிரூபித்துக் காட்டினார். ஒற்றுமையாக இருந்து போராடினால் மார்க்சிய கருத்தோடு போராடினால் வெற்றி கிட்டும் என்பதை நவம்பர் புரட்சி நிரூ பித்து காட்டியது, என்றார். இதில் திரளானோர் பங்கேற்ற னர். முடிவில், ஜோதிமணி நன்றி கூறினார்.