ஈரோடு, நவ.3- மார்க்சிஸ்ட் கட்சியின் பவா னிசாகர் - புளியம்பட்டி வட்டாரச் செயலாளராக டி.சுப்பிரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டம், பவானி சாகர் - புளியம்பட்டி வட் டாரக் கமிட்டியின் 2 ஆவது மாநாடு, பவானிசாகரில் தோழர்கள் கரியப் பன், ஐயாக்குட்டி நினைவரங்கத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு, பி. என்.ராஜேந்திரன், ஆர்.ரமேஷ், ஏ.ரேவதி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்.ஊட்டி சுப்பு செங்கொடியினை ஏற்றி வைத்தார். ஆர்.அருந்ததி அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பரம சிவம் துவக்கவுரையாற்றினார். கமிட்டி செய லாளர் டி.சுப்பிரமணி அறிக்கையை முன் வைத்தார். இம்மாநாட்டில், பவானிசாகர் பகு தியில் வீட்டுமனைப் பட்டா வழங்க, 10 ஏக்கர் நிலத்தை வருவாய்த் துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும். பவானிசாகர் அணை யில் மீன் பிடிக்கும் உரிமையை மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும். வனப் பகுதியிலிருந்து யானைகள், விளை நிலங்களுக்கு வராமல் தடுக்க வேண்டும். மல்லிகை பூ உள்ளிட்ட வாசனை பூக்களை அரசு கொள்முதல் செய்து, பவானிசாகர் ஒன்றியத்தில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். விண் ணப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மனைப் பட்டா பெற்றவர்களுக்கு உரிய இடங்களை வழங்க வேண்டும். இஸ்லாமிய மக்க ளுக்கு இடுகாடு வசதி செய்து தர வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் பவானி சாகர் - புளியம்பட்டி வட்டாரச் செயலாளராக டி.சுப்பிரமணி மற்றும் 7 கமிட்டி உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து நிறை வுரையாற்றினார். முடிவில், வட்டாரக் கமிட்டி உறுப்பினர் ஆர்.நடராஜன் நன்றி கூறினார்.