districts

img

பெத்தேல் காலனியில் அடிப்படை வசதிகள் இல்லை

சேலம், டிச.21- சேலம் அருகே உள்ள பெத்தேல் காலனி பொதுமக்களுக்கு மயா னம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார் பில் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், காடையாம் பட்டி தாலுகா, பெத்தேல் காலனியில் 50க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். 40 ஆண்டு களாக வீடுகட்டி வசித்து வரும் இப் பகுதி மக்களுக்கு அரசு ஒதுக்கி கொடுத்த இடத்தில் மின்சாரம் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து  கொடுத்திருந்தாலும், சாலை மற்றும் மயான வசதிகள் செய்து தரப்பட வில்லை. இதனை கண்டித்து பல கட்ட போராட்டங்களை பெத்தேல் பகுதி மக்கள் நடத்தி வந்த நிலை யில், தற்போது வரை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இந்நிலை யில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புத னன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஓமலூர் தாலுகா செயலாளர் என்.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வி.இளங்கோ, மாவட்ட தலைவர் ஆர்.குழந்தை வேல், சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர் வாகி சக்திவேல் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, மேற்கண்ட பிரச்சனைக்கு உரிய தீர்வு காண சமாதான பேச்சுவார்த்தை கள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.