ஈரோடு, டிச. 28- பணிக்கம்பாளையத்தில் இருந்து, சென்னிமலை செல்ல பேருந்து வசதி செய்து தரப்பட வேண் டும் என்கிற மார்க்சிஸ்ட் கட்சி, மாதர் சங்கத்தின் கோரிக்கையை அடுத்து, அரசு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட் டது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பணிக்கம்பாளையத்தில் ஆயிரக்காண மக்கள் வசித்து வரு கின்றனர். இங்கிருந்து பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் பணி மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்து வசதி இல்லாமல் சிரமப்பட்டு வரு கின்றனர். அங்கிருந்து பெருந்துறை-சென்னிமலை சாலை அல்லது பெருந்துறை - ஆர் சாலைக்கு 2 கிமீக்கு மேல் கால்நடையாக வந்து பேருந்தினை பிடிக்க வேண்டும். எனவே, ஆட்டோ பிடிக்க வேண்டி யுள்ளது. ஆட்டோவிற்கு கூடுதல் செலவாகிறது. சாதாரண மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்ப டுகின்றனர். மேலும், மகளிர் இலவச பேருந்து பயணத்தையும் மேற் கொள்ள இயல்வதில்லை. எனவே, பெருந்துறை பேருந்து நிலையம் முதல் பணிக்கம்பாளையம் வரை வந்து செல்லக்கூடிய அல்லது பெருந்துறை பேருந்து நிலையம் முதல் பணிக்கம்பாளையம், அரசு மருத்துவமனை, வெள்ளோடு ரோடு, பணிக்கம்பாளையம் பிரிவு, பணிக் கம்பாளையம், எல்லைமேடு, வழி யாக சென்னிமலை செல்ல பேருந்து வந்து செல்ல வேண்டும். இரு வழிக ளிலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என்ற வகையில் பேருந்து வசதி செய்து தர வேண்டுமாறு கடந்த 11 ஆம் தேதியன்று அரசு போக்குவரத்துக் கழக பெருந்துறை கிளை மேலாளரிடம் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைமையில் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். இந்நிலையில் சனியன்று காலை 8:30 மணிக்கு பணிக்கம்பாளையத் திற்கு பி 12 அரசு பேருந்து பவானி யில் இருந்து வந்தது. அப்பகுதி பொதுமக்கள் பேருந்திற்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வர வேற்றனர். தேங்காய் உடைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அப்பகுதி மக்க ளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, தாலுகாச் செயலாளர் ஆர்.அர்ச்சுனன், தாலுகா கமிட்டி உறுப் பினர் பழனிசாமி, மாதர் சங்க மாவட் டச் செயலாளர் பா.லலிதா ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய வற்றின் முயற்சிக்கும், மாவட்ட நிர் வாகம், அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப் பட்டது.