தருமபுரி, ஜன.24- பணிமாறுதலை கண்டித்து தமிழ் நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் தருமபுரி கூட்டுறவுத் துறை மண்டல அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மண்டலம், இளை யான்குடி வட்டாரத்தில் கூட்டுறவு சார் பதிவாளர் கள அலுவலரான வினோத் ராஜா, மண்டல அலுவலரின் காழ் புணர்ச்சியால் விதிமுறைகள் மீறி பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த பணிமாறுதலை திரும்பப் பெற வேண் டும். அரசு ஊழியர்களிடம் காழ் புணர்ச்சி காட்டக்கூடாது என வலியு றுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் தருமபுரி கூட்டுறவுத் துறை மண்டல அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் வி.சி.குமார் தலைமை வகித்தார். இதில், மாநிலச் செயலாளர் கோ.பழனியம்மாள், மாவட்ட செயலாளர் பாக்கியவதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், பொரு ளாளர் கே.புகழேந்தி, வேளாண்மைத் துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயவேல், பொதுநூலகத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறை வாக, கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் செல்வகுமார் நன்றி கூறினார்.