நாமக்கல், செப்.4- திருச்செங்கோடு விபத்துக்குள் ளான காரின் உரிமையாளருக்கு இன் சூரன்ஸ் பணம் வழங்க மறுத்து, சேவை குறைபாடு புரிந்த இன்சூ ரன்ஸ் நிறுவனம் ரூ.80 ஆயிரத்தை, காரின் உரிமையாளருக்கு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே உள்ள மனுவகாட்டு பாளையத்தில் வசித்து வருபவர் சுந் தரம் (54). நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக் கல் செய்திருந்தார். அதில் கூறியி ருப்பதாவது, இவருக்கு சொந்தமான மாருதி ஆம்னி காரை யுனிவர்சல் சேம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கம் பெனியில் 2021 அக்டோபர் முதல் ஓராண்டுக்கு பிரிமியம் செலுத்தி இன் சூரன்ஸ் செய்திருந்தார். 2022 ஜூன் மாதத்தில் இவரது வாகனம் சாலை விபத்துக்குள்ளாகி சேதம் அடைந் துள்ளது. காரின் சேதத்தை சரி செய்து பழுதை நீக்கி தர இன்சூரன்ஸ் கம்பெ னியின் அங்கீகாரம் பெற்ற ஈரோட்டில் உள்ள ஸ்ரீ சாராதாம்பாள் ஆட்டோ மொபைல்ஸ் சர்வீஸ் சென்டரில் சுந்த ரம் காரை கொடுத்துள்ளார். கார் சர்வீஸ் சென்டர் பணியாளர் கள் காரை சோதித்து விட்டு, சரி செய்ய தோராயமாக ரூ.1,25,000 செலவு ஆகும் என்று காரின் உரிமை யாளரிடம் தெரிவித்துள்ளனர். இன் சூரன்ஸ் கம்பெனியில் இதற்கான செலவு தொகையை கேட்ட போது, கார் ரூ.1,60,000 க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்றும் 75 சத வீதத்திற்கும் மேல் சேத மதிப்பு இருந் தால் சேதத்தை சரி செய்ய பணம் தர முடியாது என்றும் காரை கொடுத்து விட்டு மொத்த இழப்பீடாக ரூ.1,59,000 பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித் துள்ளனர். காரில் ஏற்பட்ட சேதத்திற்கான முழு தொகையையும் வழங்க தவறி யதால் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது காரின் உரிமையாளர் கடந்த 2023 பிப் ரவரி மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இன்சூ ரன்ஸ் நிறுவனம் முழு தொகையை யும் காரின் உரிமையாளருக்கு வழங் காதது சேவை குறைபாடு என்று 2024 செப்டம்பர் புதனன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. காரின் உரிமையாளருக்கு காரை சரி செய்ய அவர் செலுத்திய ரூ.59,778 மற்றும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.20,000 ஆகியவற்றை நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவ னத்துக்கு உத்தரவிட்டுள்ளது.