districts

img

புதிய கல்குவாரிகள் அமைத்தால் விவசாயம் பாதிப்படையும்

மேட்டுப்பாளையம், ஆக.4- மேட்டுப்பாளையம் அருகே ஏற் கனவே உள்ள கல்குவாரிகளால் விவ சாயம் பாதிக்கப்பட்டு வரும் நிலை யில், புதிய கல்குவாரிகள் அமைத் தால், சுற்றுச்சூழல் மாசுபட்டு விவசா யம் பாதிப்பிற்கு உள்ளாகும் என  கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொது மக்கள் திட்டவட்டமாக தெரிவித்த னர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வட்டத்திற்குட்பட்ட பெல் லாதி ஊராட்சி பகுதியில் இரண்டு  புதிய கல்குவாரிகள் அமைக்கவும், ஏற்கனவே இப்பகுதியில் இயங்கி  வரும் இரு கல்குவாரிகளுக்கான அனு மதியினை நீட்டிப்பு செய்வது குறித்து  அரசு தரப்பில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பெல்லாதி  கிராமம், மொங்கம்பாளையம் சமுதாய கூடத்தில் மாவட்ட சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாட்டு பொறியா ளர் ரவிச்சந்திரன், மற்றும் மாவட்ட  வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணி யன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், உள்ளூர் விவசாயி கள், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அப்போது பேசிய சிலர்,

தங்களது பகுதியில் புதிய கல் குவாரிக்கு அனுமதி கொடுப்பதால்,  உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் பொருளாதாரம் மேம் படும் என்பதால் அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் கல்குவாரிக ளுக்கு அனுமதி வழங்கலாம் என கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், மற்றொரு தரப் பினர், ஏற்கனவே இப்பகுதியில் இயங்கி வரும் கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் சுற்றுப் புற குடியிருப்புகள் சேதமும், நிலத் தடி நீரோட்ட பாதிப்பும், பாறை துகள் கள் விவசாய பயிர்கள் மீது படிந்து கருகி வருகிறது. மேலும், புதிய கல் குவாரிகள் செயல்பட அனுமதித் தால் பாதிப்புகள் மேலும் அதிகமா கும். இப்பகுதியில் குடியிருக்கவோ, விவசாயம் செய்யவோ இயலாத  நிலை ஏற்படும், என எதிர்ப்பு தெரி வித்தனர். புதிய கல்குவாரிகளுக்கு  அனுமதி வழங்கக்கூடாது என பெரும் பாலோனோர் கருத்து பதிவு செய் தனர். இருதரப்பு கருத்துக்களையும் பதிவு செய்து கொண்ட அதிகாரிகள், இது குறித்த அறிக்கை உயர் அதிகாரி களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய ஆய்விற்கு பின்னர் இறுதி முடி வெடுக்கப்படும், என தெரிவித்தனர்.