காலமானார்
கோவை, டிச. 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுக்கரை ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் வி.மணி (58) உடல் நலக்குறைபாடு காரணமாக சனியன்று காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுக்கரை ஒன்றியக் குழு உறுப்பினரும், மலுமிச்சம்பட்டி டெக்கான் ரேடியேட் டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சிஐடியு முன்னணி ஊழிய ருமான தோழர் வி.மணி உடல் நலகுறைவால் காலமானார். மலுமிச்சம்பட்டி அண்ணாநகர் பகதியில் வசித்து வந்த தோழர் வி.மணி அவர்களுக்கு கலாமணி என்ற மனைவியும் மற்றும் ஷ்யாம் கந்தசாமி என்ற மகனும் சுவாதி என்ற மகளும் உள்ளனர்.
மறைந்த தோழர் வி. மணி அவர்களின் உடலுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுக்கரை ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சட்டவிரோதமாக செயல்படும்கல் குவாரிகளை மூட வலியுறுத்தல்
சேலம், டிச.7- சேலம் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி செயல்படும் கிரானைட் கல் குவாரிகளை மூட வேண்டும் என வலியு றுத்தி, தலித் விடுதலை இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கண்ணாமூச்சி கிராமம் அருகே உள்ள கருங்காடு பகுதியில், அரசு இலவசமாக வழங் கிய நிபந்தனைக்குட்பட்ட நிலத்தில், மதுரை மாவட்டம், மேலூ ரைச் சேர்ந்த டிஆர்பி என்ற கிரானைட் கல்குவாரி நிறுவனம் குவாரி ஒன்றை செயல்படுத்தி வருகிறது.
மேலும், மாவட் டம் முழுவதும் 4504 ஏக்கர் 14 சென்ட் பஞ்சமி நிலம், மேட்டூர் வட்டத்தில் 160 ஏக்கர் நிபந்தனை நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அந்த நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, தலித் விடுதலை இயக்கத்தினர் சனியன்று சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிகழ்வில், அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னிமலை சாலை விரிவாக்கம்
ஈரோடு, டிச.7- ஈரோடு - சென்னிமலை சாலையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி யினை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு ரயில் நிலையம் முதல் சென்னி மலை வரையிலான ஈரோடு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலம் பராமரிக்கப்படும் மாவட்ட முக்கிய சாலையாகும். இச்சாலையானது ஈரோடு, சென்னிமலை, காங்கேயம் மற்றும் தாராபு ரம் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வ தற்கு இணைப்பு சாலையாகவும் பயன்படு கிறது.
பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரி கள், தொழில்துறை பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிகள் போன்ற அதிக எண்ணிக்கையி லான கல்வி நிறுவனங்கள் இச்சாலையில் அமைந்துள்ளது. ஆகவே, இச்சாலையில் கி.மீ.12.4 முதல் 13.4 வரை 1 கி.மீ நீளத்திற்கு அகலப்படுத்தி நடைபாதையுடன் கூடிய வடிகால் அமைத்து மேம்பாடு செய்யப்பட உள்ளது. ஒருங் கினைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்ப டும் இப்பணியை வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்து சாமி சனியன்று தொடங்கி வைத்தார். இச்சாலைப்பணி ஆறு மாதங்களுக்குள் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.
பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
தருமபுரி, டிச.7- பழுதடைந்து காணப்படும் தருமபுரி நீதி மன்றத்திற்கு செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம், தடங்கம் ஊராட்சி, சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் தருமபுரி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் அமைந்துள்ளது. சுமார் 18 ஏக் கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டு, நீதிபதிகள் குடி யிருப்பு, சமரசத் தீர்வு மையம் ஆகியவை கட்டப்பட்டு கடந்த 2017 ஜூன் மாதம் திறக்கப் பட்டது. இச்சாலையில் ஒருங்கிணைந்த நீதி மன்றத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், அரசு பேருந்துகள் சென்று வருகின்றன.
மேலும், இதே சாலையில் தனி யார் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவ தால், கல்லூரிப் பேருந்துகளும் சென்று வரு கின்றன. இந்நிலையில், இச்சாலை ஆங்காங்கே பழுதடைந்து, மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. இச்சாலையானது பழு தடைந்து பல ஆண்டுகள் ஆகிறது.
சீர மைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மற் றும் தருமபுரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி யும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, உடனடியாக போர்க்கால அடிப்படையில் நீதி மன்றத்திற்கு செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென வலியு றுத்தி, டிச.7 மற்றும் 9 ஆகிய இரு நாட்க ளும் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகியி ருப்பது என தருமபுரி வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அணைகளின் நிலவரம்
மேட்டூர் அணை
நீர்மட்டம்:115/120அடி
நீர்வரத்து:9,601கனஅடி
நீர்திறப்பு:1,300கனஅடி
பவானிசாகர் அணை
நீர்மட்டம்: 98/105அடி
நீர்வரத்து:2134கனஅடி
நீர்திறப்பு:2100கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:142/160அடி
நீர்வரத்து:112.40கனஅடி
நீர்திறப்பு:404.99கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:68.38/72அடி
நீர்வரத்து:784கனஅடி
நீர்திறப்பு:1097கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:113/120அடி
நீர்வரத்து:310கனஅடி
நீர்திறப்பு:583கனஅடி
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:46.20/60அடி
நீர்வரத்து:820கனஅடி
நீர்திறப்பு:748கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்:88.42/90அடி
நீர்வரத்து:351கனஅடி
நீர்திறப்பு:424கனஅடி