திருப்பூர், மே 21 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழகத் தொழிலாளி வர்க்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஆர்.உமாநாத்தின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் திருப்பூரில் கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலை யம் முன்பாக செவ்வாயன்று காலை ஆர்.உமாநாத் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி.சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.உண் ணிகிருஷ்ணன் ஆகியோர் தோழர் உமாநாத்தின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர். இதில் சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்பட கட்சி மற்றும் சிஐடியு அணியி னர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி உமாநாத்தை நினைவு கூர்ந் தனர்.