districts

img

தோழர் மணிவண்ணன் நினைவு தின இறகுப்பந்து போட்டி

கோவை, நவ.24- அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தின் கோவை மாவட்டக் குழு சார்பில்,  தோழர் மணிவண்ணன் நினைவு தின இறகுப்பந்து போட்டி சனியன்று நடை பெற்றது. அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தின் கோவை மாவட்டக்குழு சார்பில்,  தோழர் மணிவண்ணன் நினைவு இரண் டாம் ஆண்டு மாநில அளவிலான வழக் கறிஞர்களுக்கு இடையே இறகுப்பந்து போட்டி சனியன்று காளப்பட்டியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். மூத்த தோழர் சுந்தரமூர்த்தி சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்தார். வழக் கறிஞர் ஆறுச்சாமி வரவேற்றார். விளை யாட்டுப் போட்டியை அகில இந்திய  வழக்கறிஞர்கள் சங்க தேசிய இணைச் செயலாளர் முத்து அமுதநாதன் போட்டியை துவக்கி வைத்து சிறப்பு ரையாற்றினார். இப்போட்டியில் மாநி லம் முழுவதும் இருந்து 85 அணிகள் பங்கேற்றன. மாலை நடைபெற்ற அரை  இறுதிப் போட்டியினை கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ் குமார் துவக்கி வைத்தார். இதன்பின்  போட்டியில் வெற்றி பெற்ற அணிக ளுக்கு, ஜேஏஏசி தலைவர் பி.நந்த குமார் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்  தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், மாநில  பொதுச்செயலாளர் சிவக்குமார்,  கோவை வழக்கறிஞர் சங்கத்தின் செய லாளர் சுதீஸ், கோயம்புத்தூர் குற்றவி யல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஐயப் பன், செயலாளர் சீலாராஜ், மாநிலப்  பொருளாளர் மா சே தூங், மாவட்டச் செயலாளர் ஜோதி குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.