districts

img

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் ஃபாரூக் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல்

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் ஃபாரூக் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல்  மற்றும் ரத்ததான முகாம் கோவையில் நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ரசீதா ஃபாரூக், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் யு.கே.சிவஞானம், திவிக நேருதாஸ், பியுசிஎல் சா. பாலமுருகன், திரவிட இயக்க தமிழர் பேரவை காசு நாகராஜ், சங்கர் அறக்கட்டளை கவுசல்யா, தபெதிக சாஜித், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அஷ்ரப் அலி, புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், சிபிஐஎம்எல் லிபரேசன் பாலசுப்பிரமணியம், ரெட்ஸ்டார் இனியவன், மக்கள் அதிகாரம் மூர்த்தி உள்ளிட்ட திரளான அமைப்பினர் பங்கேற்று, பாசிசத்தை வேரறுப்போம், உழைக்கும் மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம் என்கிற உறுதி மொழியேற்றனர்.