கோவை, ஜூலை 22- குழந்தை திருமணம், கொத்த டிமை தொழிலாளர்கள் தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை வடக்கு கோட்ட விழிப்பு மற்றும் கண்காணிப் புக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட் டது. கோவை வடக்கு கோட்ட விழிப்பு மற் றும் கண்காணிப்புக்குழு கூட்டம் வரு வாய் கோட்டாட்சியர் பூமா தலைமை யில் கவுண்டம்பாளையம் வடக்கு கோட் டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற் றது. இதில், மேட்டுப்பாளையம், அன் னூர், கோவை வடக்கு வட்டாட்சியர் கள், காரமடை, அன்னூர், எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பி னர்கள் கனகராஜ், கணேஷ்குமார், செல் வராஜ், சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், அரசால் கட்டி தரப்பட்ட ஏழை எளிய மக் கள் வாழும் இடியும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை கணக்கெடுப்பு நடத்தி, புதிய வீடுகள் கட்டித் தருவ தற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம், வேடர்காலனி பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் இலவச வீட்டுமனை பட்டா கோரி பல ஆண்டுகளாக அர சுக்கு கோரிக்கை வைத்து வருகின் றனர். அந்த கோரிக்கைகளின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, பட்டா வழங்க வேண்டும். கொத்தடி மைகள், குழந்தை தொழிலாளர்கள், கையால் மலம் அள்ளுவோர், குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் மீது தாமதம் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வன உரிமைச்சட்டத்தின் படி பழங் குடியின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலங்கள் ஒதுக்குதலில் அளவீடுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கலைந்து, மறு நிலஅளவை செய்து தீர்வு காண வேண்டும். மேட்டுப்பாளையம், நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து பாதிக் கப்பட்ட குடும்பங்களுக்கும், அவர்தம் உறவினர்களுக்கும் அரசின் சார்பில் வீடுகள் மற்றும் இலவச பட்டா வழங் குவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். புத்தர் நகரில் குடி யேறியுள்ள மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என கண் காணிப்புக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கோரிக்கைகள் மீது அலுவலர்களுடன் ஆலோசித்து தீர்வு காண்பதாக வரு வாய் கோட்டாட்சியர் பூமா உறுதிய ளித்தார்.