districts

img

சாலை ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்: ஆட்சியரிடம் புகார்

தருமபுரி, ஜூலை 4- காரிமங்கலம் அருகே உள்ள  பெரியாம்பட்டி சாலை ஆக்கிரமிப்பு களை விரைந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வியா ழனன்று மனு அளித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், காரிமங்க லம் வட்டத்திற்குட்பட்ட பெரியாம் பட்டி பகுதி, சுமார் 100 குக்கிராமங்க ளுக்கு மையப்பகுதியாக உள்ளது.  பெரியாம்பட்டிக்கு ஆயிரக்கணக்கா னோர் தங்களின் தினசரி அன்றாட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய வந்து செல்கின்றனர். பெரி யாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது காய்கறி கடைகள், கோழிக் கடைகள், மீன் கடைகள், மட்டன் கடைகள், பாணிப்பூரி கடைகள்  என  சாலையை ஆக்கிரமித்து போக்குவ ரத்து இடையூராக கடைகள் வைக்கப் பட்டுள்ளன.

தற்போது சாலை குறுகி விட்டதால், கனரக வாகனங்கள் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு இயக் கப்படும் பேருந்துகளும் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால்,  அவ்வப்போது பள்ளி மாணவர்க ளும், பொதுமக்களும் விபத்தில் பாதிப்படைகின்றனர். பேருந்துக ளுக்காக நிற்கும் பொதுமக்களுக் கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நில வுகிறது. எனவே, பெரியாம்பட்டி யில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய தருமபுரியில் இருந்து  வரும் பேருந்துகள் தற்போது நிற் கும் இடத்தில் இருந்து சுமார் 100 அடி முன்நோக்கி நிறுத்த வேண்டும்.

அதேபோல் கிருஷ்ணகிரி யில் இருந்து வரும் அனைத்து பேருந் துகளையும் சுமார் 200 அடி முன் நோக்கி நிறுத்த வேண்டும். அங் குள்ள கோவில் காலியிடங்களில் கடைகளை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, விபத்துகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்ப குதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.