districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தெருவிளக்கு இல்லை

தெருவிளக்கு இல்லை சேலம், பிப்.26- சேலம் மாநகர் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட சிவகாமி நகர் பகுதியில் இருந்து சட்டக்கல்லூரி செல்லும் சாலை வரை தெருவிளக்கு இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம், ஆறாவது  கோட்டத்திற்குட்பட்ட, சிவகாமி நகர் பகுதியில் இருந்து,  சட்டக்கல்லூரி செல்லும் சாலைப்பகுதியில் தெருவிளக்கு இல்லாமல் நீண்ட காலமாக இருள் சூழ்ந்தே காணப்ப டுகிறது. இதனால், வாகன விபத்து ஏற்படுவதுடன், அடிக்கடி  சமூக விரோத செயல்களும், அரங்கேறி வருவதாக கூறப் பட்டுகிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை  எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு  மின்விளக்கு அமைத்து தரவேண்டும் எனவும், மேலும், சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், அச்சத்தை  ஏற்படுத்தும் வகையில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட தெருநாய்களை உடனடியாக அப்புறப்படுத்து வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலம், நகையை அபகரித்த தம்பி  மாற்று பாலினத்தவர் புகார் மனு

நிலம், நகையை அபகரித்த தம்பி  மாற்று பாலினத்தவர் புகார் மனு சேலம், பிப்.26- 5000 சதுர அடி நிலத்தையும், 35 பவுன் நகையும் அபக ரித்துக் கொண்ட தனது தம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி,  பாதிக்கப்பட்ட மாற்று பாலினத்தை சேர்ந்தவர், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். சேலம் மாவட்டம், பாகல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாற்று பாலினத்தவர் ராதிகா. இவர், பத்துக்கும் மேற்பட்ட  மாற்று பாலினத்தவர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில், புகார் மனு ஒன்றை அளித்தனர்.  அதில், கடந்த 30 ஆண்டுகளாக சிறுக சிறுக பணம் சேமித்து ஐயாயிரம் சதுர அடி நிலத்தை வாங்கினேன். அந்த  நிலத்தை ஆசை வார்த்தை கூறி எனது தம்பி தேவராஜ்  மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் என்னிடமிருந்து ஏமாற்றி வாங்கிக் கொண்டனர். மேலும், என்னிடம் இருந்த 35 பவுன் நகையும் பறித்துக்  கொண்டனர். இதுகுறித்து தனது தம்பி தேவராஜிடம்  கேட்டதற்கு, என்னை வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தி யது மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்க மறுக்கின்றனர். தற்போது, வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறேன். எனவே, மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், என்னிடமிருந்து அபகரித்துக் கொண்ட 5000 சதுர அடி நிலத்தையும், 35 பவுன் நகையும் மீட்டு தர வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

தருமபுரி, பிப். 26- வழித்தடத்தை அபகரிக்க முயன்றவர்கள் மீது நடவ டிக்கை எடுக்காததால் தன் மீது தாக்குல் நடத்துவதாக தெரிவித்து தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஜருகு கட்டுவ ளவு பகுதியில் பழனிசாமி(60).இவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அத்துமீறி வழித்தடம் கோரி ஒரு சிலர் மிரட்டி  தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கா ததை கண்டித்தும், மேலும் நிலத்தை ஆக்கிரமிக்க முயற் சிப்பதை தடுக்க கோரி பழனிசாமி மற்றும் அவரது மனைவி  ராணி, ஆகியோர் பெட்ரோல் ஊற்றி கொண்டு தீக்குளிக்க  முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்  அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.  அதே போல், வே.முத்தம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன்,  நிலப்பிரச்சனை தொடர்பாக,  ஐந்து முறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கா ததை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க  முயற்சி செய்தார். உடனடி யாக பாதுகாப்பு பணியில் போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். மேலும் அவர்கள் மனு அளிக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அடுத்தடுத்து இருவர் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருணைக் கொலை செய்து விடுங்கள் வயது முதிர்ந்த தம்பதியினர் கோரிக்கை

சேலம், பிப் 26- நிலத்தை அபகரித்து கொண்டு, வழித்தடத்தையும் ஆக்கிரமித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது எங்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வயது முதிர்ந்த தம்பதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  சேலம் மாவட்டம், பெத்தநாயகன்பாளையம் தளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (73). இவரது மனைவி சரோஜா (60). இவர்கள் இருவரும், திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தளவாய்பட்டி அருகே ஒட்டப்பட்டி பகுதியில் 1.39 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். விவசாய நிலத்தில் சுமார் இரண்டு சென்ட் நிலத்தையும், வழித்தட இடத்தையும் எனது தம்பி பரமசிவம் என்பவர் அபகரித்துக் கொண்டார். எங்கள் விவசாய நிலத்தில் சென்று விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு வழித்தடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு, நிலத்திற்கு செல்ல விடாமல் தடுத்து வருகிறார். இதுகுறித்து, பரமசிவமிடம் கேட்டதற்கு, எனது மகன் ஷங்கர் காவல்துறையில் வேலை செய்து வருவதால், ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி மிரட்டல் விடுகின்றனர்.  இதுகுறித்து, ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் கடந்த 10 முறை புகார் தெரிவித்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மூன்று முறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் வாழ்வாதாரமே விவசாயம் தான். அதை செய்யவிடாமல் மிரட்டி வருகின்றனர். இதனால் எங்களால் வாழ முடியவில்லை. எனவே, எங்களை கருணை கொலை செய்து விட வேண்டுமென கண்ணீர் மல்க தெரிவித்தனர். இம்மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம், மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொடர்ந்து மிரட்டல் விட்டு வரும் காவல்துறையைச் சேர்ந்த சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் 7 பேர் மீது வழக்கு

சேலம், பிப்.26- மேட்டூர் அருகே கொளத்தூரில் இரு வேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  பள்ளி முடிந்து வீடு சென்ற சிறுமிகளை,  இளைஞர்கள் கேலி செய்ததாக கூறி, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவி னர்கள் ஞாயிறன்று மாலை, கேலி  செய்த இளைஞர்களை தாக்கியுள்ள னர். இதில் காயம் அடைந்த மயில்சாமி  (22) சேலம் அரசு மருத்துவமனையி லும்,சேது (20) தனுஷ்(24) ஆகிய  இரண்டு பேரை மேட்டூர் அரசு மருத் துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து, இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு  செய்தனர். இதில் குமார், ரத்தினகுமார்  ஆகிய இருவரை போலீசார் கைது  செய்து மேட்டூர் காவல் நிலையத்தில்  வைத்து விசாரணை நடத்தி வருகின்ற னர். மேலும், தலைமறைவாக உள்ள 5  பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  இதேபோன்று, சிறுமியின் பெற் றோர் கொடுத்த புகாரின் பேரில் மயில் சாமி, சேது, தனுஷ், ஹரீஸ் ஆகிய 4  இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ  வழக்கு பதிவு செய்தனர். மேலும், அசம்பாவிதம் ஏற்படா மல் இருக்க கருங்கல்லூர், காவேரிபு ரத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாசிலா அருவிக்கு படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்

நாமக்கல், பிப்.26- வாரவிடுமுறையை ஒட்டி கொல்லிமலை யில் உள்ள மாசிலா அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப் பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலை கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி  உயரத்தில் உள்ளது. இங்கு அரப்பளீஸ்வரர் கோவில், எட்டிகை அம்மன் கோவில், மாசி பெரியண்ணன் சாமி கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, வாசலூர்பட்டி படகு இல்லம், தாவ ரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள்  உள்ளது. இப்பகுதிகளுக்கு உள்ளூர் மக்கள்  மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும்  மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, மாசிலா அருவிக்கு விடு முறை தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து குதூகலமாக குளித்து செல்வது வழக்கம். இந்த நிலை யில், வாரந்திர விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மாசிலா அருவிக்கு வருகை தந்தனர். தற்போது, குளிர் காலம் முடிந்து வெப்பநிலை தொடங்கியதாலும், ஞாயிற்றுக்கிழமை என்ப தாலும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

பாஜகவை வீழ்த்த மக்கள் சந்திப்பு இயக்கம்

பாஜகவை வீழ்த்த மக்கள் சந்திப்பு இயக்கம் திருப்பூர், பிப்.26- பாஜகவை மக்களவைத் தேர்தலில் வீழ்த்துவோம் என்ற  கோரிக்கையை முன்வைத்து திருப்பூரில் அனைத்திந்திய இளை ஞர் பெருமன்றம் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் ஞாயிற் றுக்கிழமை தொடங்கியது. திருப்பூர் குமரன் நினைவகம் முன் நடைபெற்ற சந்திப்பு  இயக்கத்தை இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் அரவிந்த்குமார் துவக்கி வைத்தார். வேலை யின்மை, விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றுக்குக் கார ணமான பாஜகவை மக்களவைத் தோ்தலில் வீழ்த்துவோம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல் வேறு இடங்களில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை ஒரு வாரத்துக்கு விநியோகிக்க போவதாக இதில் பங்கேற்ற வர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், இரண்டாவது மண்டலக் குழு தலைவர்  அசோக், முன்றாவது மண்டலக் குழு தலைவர் தினேஷ், மாநிலக் குழு உறுப்பினர் சங்கீதா உட்பட பலர் கலந்து கொண் டனர்.

8 டன் முருங்கைக்காய் வரத்து

8 டன் முருங்கைக்காய் வரத்து திருப்பூர், பிப்.26- வெள்ளக்கோவில் தனியார் சந்தைக்கு 8 டன் முருங் கைக்காய் விற்பனைக்கு வந்துள்ளது. வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் முருங்கைக்காய் சாகுபடி செய்யப்பட்டு வரு கிறது. இதனால், வெள்ளக்கோவில் நகரில் வாரந்தோறும்  ஞாயிற்றுக்கிழமை தனியார் சார்பில் முருங்கைக்காய் சந்தை  நடைபெற்று வருகிறது. இதில் விவாசாயிகள் முருங்கைக் காய்களை விற்பனை செய்து பயன்பெறுகின்றனர். இந்த  வாரம் நடைபெற்ற முருங்கைக்காய் சந்தைக்கு 8 டன் முருங் கைக்காய்களை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனர். இதில், ஒரு கிலோ கரும்பு முருங்கைக்காய் ரூ.40, செடி முருங் கைக்காய் ரூ.30, மர முருங்கைக்காய் ரூ.20 க்கு விற்பனை யாயின.

ரூ.4.28 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

ரூ.4.28 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் அவிநாசி, பிப்.26-  சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  நடைபெற்ற  ஏலத்தில் சுமார் 32 விவசாயிகள் கலந்து 238 மூட்டைகள்  நிலக் கடலையை ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்தனர். திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் 3 பேர் கலந்து கொண்டனர். நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரகம் ரூ.6,750 முதல் ரூ.7,000  வரையிம், இரண்டாம் ரகம் ரூ.6,500 முதல் ரூ.6,750 வரையி லும், மூன்றாம் ரகம் ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம்  போனது. மொத்தம் ரூ.4.28 இலட்சத்திற்கு ஏலம் நடை பெற்றது.

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்து காலி குடங்களுடன் சர் ஆட்சியரிடம் மனு

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்து காலி குடங்களுடன் சர் ஆட்சியரிடம் மனு கோவை, பிப்.26- முறையாக குடிநீர் விநியோகம் செய்ய கோரி பொள் ளாச்சி அடுத்த பக்கோதிபாளையம் கிராம பொதுமக்கள் காலி  குடங்களுடன் மாவட்ட பொள்ளாச்சி சர் ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர்.  இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித் துள்ளதாவது, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஜமீன் கோட் டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பக்கோதிபாளையம் கிராமத் தில் கடும் தண்ணீர் பற்றாக்குறையால் அத்யாவசிய தேவைக ளுக்கு கூட தண்ணீர் விலைகொடுத்து வாங்கும் சூழலுக்கு  தள்ளப்பட்டுள்ளோம்‌‌.  ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு ஆழியார் ஆற்றில்  இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஜமீன் கோட்டம் பட்டியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வந்த டைந்து, அங்கிருந்து ஊராட்சிக்குட்பட்ட 5 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ஜமீன் கோட்டாம்பட்டி கிராமத்திற்கு முறை யாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஊராட்சி மன்ற  தலைவர் பக்கோதிபாளையம் கிராமத்திற்கு மட்டும் பாரபட் சம் காட்டுகிறார். இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கூட  தண்ணீர் விநியோகம் செய்யபடுவதில்லை. பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் பக்கோதிபாளையம் கிராமத்திற்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய ஜமீன்  கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உத்தரவிடுமாறு தெரிவித்துள் ளனர்.  மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட சர் ஆட்சியர் அ.கேத் தரின் சரன்யா முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்ப டுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 

மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவம் அதிகரிப்பு

மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவம் அதிகரிப்பு உதகை,பிப். 27- கொரோனா பாதிப்பிற்கு பிறகு மூலிகை மருத்துவத்தின்  முக்கியத்துவம் அதிகரித்து உள்ளதாக தேசிய ஓமியோபதி ஆணைய தலைவர் கூறினார். நீலகிரி மாவட்டம் எமரால்டில் உள்ள மத்திய அரசு கட் டுப்பாட்டில் இயங்கும் மூலிகை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் 2  தேசிய கருத்தரங்கம் உதகையில் திங்களன்று தொடங்கியது. இதில் மூலிகை ஆராய்ச்சி மைய டைரக்டர் ஜெனரல் சுபாஷ் கவுசிக் வரவேற்றார். எமரால்டு மூலிகை ஆராய்சசி மைய பொறுப்பாளர் சசிகாந்த் கருத்தரங்கு குறித்து விளக்கினார். தேசிய ஓமியோபதி ஆணைய தலை வர் அணில் குரானா தலைமை வகித்து மலரை வெளி யிட்டார்.  அப்போது அவர் கூகையில், உதகை எமரால்டில் உள்ள  மூலிகை ஆராய்ச்சி மையம் 7½ ஏக்கர் பரப்பளவில்  செயல் பட்டு வருகிறது. இந்த மையத்தில் 70 வெளிநாட்டு மூலிகை கள் பயிரிடப்பட்டு, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த  மூலிகைகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்ப டுகிறது. மேலும் கொரோனா காலகட்டத்திற்கு பின்னர்  மூலிகைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, மூலிகை வேளாண் தொழில்நுட்பங்களை ஆராய்ச்சியாளர்கள் விவசா யிகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயி கள் மூலிகைகளை ஊடுபயிராக பயிரிட்டு, பலனடை யலாம். மேலும் நமக்கு தேவையாக மூலிகைகள் 69 சதவீதம் காடுகளிலிருந்து பெறப்படுகிறது. மீதமுள்ள 31 சதவீதம் மட்டுமே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பயிரி டப்படுகிறது.  நீலகிரி மாவட்டத்தில் 70 மூலிகைகள் பயிரிடப்படு வதால், அவற்றின் சாகுபடியை பெருக்கி தேவையை பூர்த்தி  செய்ய முடியும். மூலிகைகளின் சந்தை மதிப்பு அதிகம் என்ப தால், விவசாயிகள் மூலிகை விவசாயத்தை மேற்கொண்டு அதிக வருவாய் பெறலாம். உதகையில் உள்ள மூலிகை ஆராய்ச்சி மையம் மூலிகை பொருட்கள் ஆய்வகமாக மாற்ற  வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் ஆயுஷ் அமைச்சக ஓமியோபதி ஆலோசகர் சங்கீதா துகல், கேரள மூலிகை துறை தலைவர் ஷோபா சந்தி ரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் விரோத பாஜக அரசு - ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப். 26- ஒன்றிய மோடி அரசை எதிர்த்து போராடி  வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட் டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசின் விவசாய விரோத  கொள்கைகளுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிஐடியு உள்ளிட்ட அமைப்புகள் ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச பொருளாளர் செ.தங்கமுத்து தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.சுப்ரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி, எஸ்.பொன்னுசாமி, ஏஐடி யுசி சின்னசாமி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏராள மானோர் கலந்து கொண்டு மோடி அரசிற்கு  எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி னர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஈரோடு, பிப். 26- ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 29 ஆம் தேதியன்று கூட் டம் நடைபெற உள்ளது. காலை முதல்  மனுக்கள் பெறப்படும், 11.30 முதல் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குறை களைத் தெரிவிக்கலாம். 12.30 முதல்  அலுவலர்களின் விளக்கங்கள் தெரி விக்கப்படும். மேலும் விவசாய பெரு மக்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட  ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரி வித்துள்ளார்.

ஆந்திராவில் பரவும் பறவைக் காய்ச்சல்  ஈரோட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஈரோடு, பிப். 26- ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத் தில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து  ஈரோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி, மற்றும் வனப்பற வைகள் ஆகியவற்றை முக்கியமாகத் தாக்கும். மேலும் நோய் பாதித்த பண்ணை களில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள் மற்றும் தீவன கள் மூலமாக இந்நோய் பரவுகிறது. இந் நோய்க்கு சிகிச்சை எதுவும் இல்லை. நோய்  வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகளை யும், உயிர் பாதுகாப்பு முறைகளையும் பின் பற்ற வேண்டும்.  இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்திருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் இத்தகைய நோய்த்தாக்குதல் எதுவும் இல்லை. கால்நடை பாரமரிப்புத்துறை மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கோழிப்பண்ணைகள், வெள் ளோடு பறவைகள் சரணாலயம் மற்றும் கடைக் கோழிகளை நேரில் பார்வை யிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர கண் காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பறவைக்காய்ச்சல் நோய்  தொற்று ஏற்படாமலிருக்க ஆந்திராலி ருந்து வாத்து, கோழிகள், முட்டை, தீவனம்  தயாரிக்க தேவையான மூலப்பொருட் களை வாங்கக் கூடாது, கடந்த ஒரு மாதத்திற் குள்ளாக ஆந்திராவிலிருந்து குஞ்சு பொரிப் பதற்கான முட்டைகள், வாத்துகள் மற்றும் கோழிகள் ஏதேனும் வாங்கப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிந்து அழிப்பதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கோழிப்  பண்ணைகளுக்குள் செல்பவர்களும், வெளியே வருபவர்களும் கிருமி நாசினி யால் கால்களை சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும். பண்ணையில் இறந்த கோழிகளை உடனுக்குடன் முறையான கிருமி நாசினி தெளித்து புதைக்க வேண்டும். கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்பு  ஏதும் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை  பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க  வேண்டும். மேற்காணும் தடுப்பு நடவ டிக்கை மேற்கொண்டு பறவைக்காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு  ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித் துள்ளார்.

கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்க வேண்டும்

பழங்குடியின மக்கள் முற்றுகை

உதகை,பிப். 26- பழங்குடியின கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை பழங்குடியின மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  நீலகிரி மாவட்டம் உதகை ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று பொதுமக்கள் குறை  தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட  ஆட்சியர் அருணா தலைமை வகித்தார். இந்த  குறை தீர்ப்பு கூட்டத்தில் பல்வேறு தரப்பி னர் மனுக்களை அளித்தனர்.  இதற்கிடையே, உதகை அடுத்த கொர னூர் காலனியை சேர்ந்த ஆதி திராவிடர் மக் கள் மற்றும் பிக்கபத்திமந்து கிராமத்தை சேர்ந்த தோடர் பழங்குடியினர் தங்கள் கிரா மங்களுக்கு பேருந்து இயக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பிக்க பத்து மந்தில் 25 வீடுகளும், கொரனூர் காலனி யில் 30 வீடுகளும் உள்ளன. பல ஆண்டுக ளாக எப்பநாட்டில் இருந்து, இரவு நேரத்தில்  எங்களது சொந்த ஊர்களுக்கு நடந்து செல் லும் போது வனவிலங்குகள் தாக்குதல் இருந் தது. எனவே எங்கள் ஊருக்கு அரசு பேருந்து  இயக்க கோரிக்கை விடுத்ததன் அடிப்படை யில் தற்போது உதகையில் இருந்து  எப்பநாடுக்கு புறப்படும் பேருந்தை கொர னூர் வரை இயக்க உத்தரவிடப்பட்டது. இந் நிலையில் கடந்த 25 ஆம் தேதியன்று இரவு  எப்பநாட்டிற்கு வந்த அரசு பேருந்தை ஊர் தலைவர் தலைமையில் பொதுமக்கள் மறித்து பேருந்தில் இருந்த பெண்கள் உள்பட  பயணிகளை இறக்கி விட்டனர். மேலும் கொர னூருக்கு பேருந்து வராது என்று கூறி விட்ட னர். எனவே கொரனூருக்கு அரசு பேருந்து  இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற னர்.  இதைத்தொடர்ந்து ஆர்டிஓ குந்தா தாலுகா பிக்கட்டி அடுத்த அணிக்காடு மக்கள்  கொடுத்த மனுவில், அணிக்காடு பகுதியில்  குடிநீர், கழிவு நீர் கால்வாய், தெருவிளக்கு கள் சமுதாயக்கூடம், உள்ளிட்ட அடிப்படை  வசதிகள் எதுவும் இல்லை. இது குறித்து  பலமுறை மனு கொடுத்தும் இதுவரை  எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். என்றனர்.  கோத்தகிரி அருகே நியாங், பூபதியூர்  ஊர் தலைவர் மாகாளி மற்றும் பொதுமக் கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், ஜக்க னாரை 1 வது வார்டுக்கு உட்பட்ட பூபதியூர் என் னும் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் பயன்படுத்தி வந்த பொது மற்றும் சுடுகாட்டு பாதை தடை  செய்ததை அடுத்து பலவித போராட்டங்கள் மேற்கொண்டு முடிவில் டிஆர்ஒ, ஆர்டிஒ, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் உள் ளிட்டோர் நேரில் கள ஆய்வு செய்தும், நில  எடுப்பு செய்து பாதை அமைத்து தருவதாக உறுதியளித்து அதற்குண்டான அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது. இந்த  சூழலில் ஆதிதிராவிடர் நல அலுவலர் பணி  மாறுதலாகி சென்று விட்டதால் பாதை அமைத்து தரும் பணி நின்று விட்டது. எனவே  இதனை ஆய்வு செய்து உடனே பாதை அமைத்து தர நடவடிககை எடுக்க வேண்டும்  என்று உள்ளது.

ஜியோவுக்கு மார்க்கெட்டிங் – பிஎஸ்என்எல்லுக்கு ஓரவஞ்சனை

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  ஈரோடு பிஎஸ்என்எல் 800 ஊழியர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு இயங்கி வந்தது. 2.50  லட்சம் தொலைபேசி இணைப்புக ளுடன் 121 எக்சேஞ்கள் செயல்பட்டு  வந்தது. வெளியூர் அழைப்புகளுக் காத்திருந்து பேசும் காலம் போய் தானியங்கி எக்சேஞ்சுகளாகி நவீன வசதிகளுடன் செயல்பட்டு வந்தது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான முறையில் சேவையளிக்கப்பட்டது. ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பு பற்றிய அச்சம் இல்லை. குடியி ருப்புகள் அமைத்துக் கொடுக்கப் பட்டன. ஆட்சிகள் மாறியபோது காட்சிகளும் மாறின. 2014ல் மத்தி யில் ஆட்சிக்கு வந்த பாஜக,  மத்திய அரசின் கட்டுப்பாட் டில் இருக்கிற தொலைத்தொடர் புத்துறையை சாதகமாக்கிக் கொண்ட பாஜக தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு ஆதரவாக தொலைத்தொடர்புத் துறையைக் கடை விரித்தது. ஜியோ சிம்முக்கு விளம்பர தூதுவராக கட்அவுட்டில் தோன்றியவர், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லை முடித்துக்கட்டும் வேலையை ஆரம்பித்தார். சட்டப் பாதுகாப்புடன் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு, பணியாளர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் அளிக்கப்படவில்லை. போராடி பெற வேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டனர். ரகசிய கணக் கெடுப்பு நடத்தி கணிசமானோரை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டதில், ஈரோடு மாவட்டத்தில் 75 விழுக்காட் டினர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். குறிப்பாக 700 பேர் விருப்ப ஓய்வு பெற்றனர். இன்று சுமார் 170 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஈரோடு  என்கிற ஒரு மாவட்டத்தில் மட்டும  இந்நிலை என்றால் நாடு முழுவ தும் கணக்கிட்டுக் கொள்ளலாம். ஈரோட்டில் மட்டும் 52 எக்சேஞ்கள் மூடப்பட்டு விட்டன. சுமார் 30 ஆயி ரம் தொலைபேசி இணைப்புகளாகச் சுருங்கி விட்டது. அனைத்து பணிக ளும் தனியாருக்கு விடப்பட்டன.  டிஜிட்டல்...டிஜிட்டல் என வாய் கிழிய பேசியவர் தனியாருக்குக் கொடுக்கப்பட்ட அலைக்கற்றை உரிமத்தை, பிஎஸ்என்எல்லுக்கு கொடுக்கப்படவில்லை. 2ஆம் தலை முறையிலிருந்து 4ஐக் கடந்து 5 ஆம் தலைமுறைக்கு வந்து விட்டோம். ஆனால் பிஎஸ்என்எல் க்கு 4ஜி சேவை வழங்கப்படவில்லை. இன்று போய் நாளை வா என்ற  கதைதான் தொடர்கிறது. அலுவல கத்தைத் தவிர அனைத்து பணிக ளும் தனியாருக்கு விடப்பட்டுள் ளன. பணியாளர்கள் டென்டர் மூலம்  நியமிக்கப்பட்டனர். வேலை அடிப்ப டையில் தரை வழி கேபிள் பராமரிப்பு,  கண்ணாடி இழை கேபிள் பராமரிப்பு,  எஸ்டிஆர் பராமரிப்பு, வாடிக்கையா ளர் சேவை, காவலர் பணி, துப்புரவா ளர் உள்ளிட்ட ஹவுஸ்கீப்பிங் பணி, செல்போன் கோபுரம் பராமரிப்பு அனைத்தும் தனியாருக்கு விடப் பட்டுள்ளது. சுமார் 600 பேர் செய்து  வந்த வேலையை இன்று 200 பேர் மட்டுமே செய்து வருகின்றனர். குறைந்தபட்ச கூலி சட்டம், வருங் கால வைப்பு நிதி, மருத்துவ வசதி உள்ளிட்ட எந்த உரிமைகளும் இல்லை. ஒப்பந்ததாரர் கொடுக்கும் சம்பளமே ஊதியம். இந்திய அரசின்  தொலைத்தொடர்பு துறை ஊழியர்க ளின் பணி இவ்வாறு முறைசாரா தொழிலாளர்களைப் போல மாற்றப் பட்டுள்ளது.  தொழிலாளர் நலனுக்கு எதிரான  பாசிட்டுகளை தொடர்பு எல்லைக்கு  அப்பால் அனுப்ப வேண்டிய கடமையை எதிர்வரும் தேர்தல் மூலம் நிறைவேற்றுவது அனைவ ரின் கடமையாகும். எஸ்.சக்திவேல்

போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து மாற்றம் கோவை, பிப். 26-  பிரதமர் கோவை சூலூர் மற்றும் பல்லடம் வருவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை:  பாலக்காட்டிலிருந்து வாளையார் வழியாக வரும் தாராபுரம், திருச்சி செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மதுக்கரை, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும். 2) கோவை மாநகருக்குள் இருந்து வரும் கனரக வாகனங்கள் சுங்கம் செல்ல வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.