கோபி, செப். 6- கோபி அருகே அரசு பள்ளியில் ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைக்கும் தொடக் கப்பணியை அந்தியூர் எம்எல்ஏ. வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பொலவக்கா ளிபாளையம் அரசு மேல்நிலைபள்ளியில் ஆசிரியர் தின விழா வில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 12 லட்சம் மதிப் பீட்டில் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைக்கும் தொடக்கப்பணியை அந்தியூர் எம்எல்ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் வியாழனன்று கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் புருஷோத்தமன், மாவட்ட கவுன்சிலர் சிவகாமிதங்கவேல், மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேணுகாதேவி, செந்தில், ஸ்ரீதர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் காளியண்ணன், பொதுபணிது றையினர், பள்ளி ஆசிரயை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.