பள்ளிபாளையம், மார்ச் 10 - கந்து வட்டிக்கொடுமைக்கெதிரான போராட்டத்தில் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட பள்ளிபாளையம் தோழர் வேலுச்சாமி நினைவேந்தல் நிகழ்வு வெள்ளி யன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக பணியாற்றி வந்தவர் சி.வேலுச்சாமி. கந்துவட்டி கும்பலிடம் கடன் வாங்கி, பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவை செய்து, அதை இணை யதளத்தில் வெளியிட்டதை தோழர் வேலுச் சாமி தட்டி கேட்டதால், ஆத்திரமடைந்த கந்து வட்டி கும்பல், 2010ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதியன்று கொடூரமாக கொலை செய்தது. இச்சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. கந்து வட்டிக்கொடுமைக்கெதிரான போராட்டத்தில் உயிரிழந்த தோழன் வேலுச் சாமியின் 13 ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று அனுசரிக்கபட்டது. பள்ளிபாளையம் உள்ளிட்ட நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தியாகி வேலுச்சாமி நினைவேந்தல் நிகழ்வு நடை பெற்றது. இதில், அக்ரஹாரம் பகுதியில் நடை பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு, கட்சி கிளைச் செயலாளர் சந்திரசேகர் தலைமை ஏற்றார். பள்ளிபாளையம் ஒன்றிய செய லாளர் ஆர்.ரவி, கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் மற்றும் தியாகி வேலுச்சாமியின் குடும்பத்தார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நாமக்கல் இதேபோல், நாமக்கல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவல கத்தில் அனுசரிக்கப்பட்டது மாவட்ட செய லாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட குழு உறுப் பினர்கள் சி.துரைசாமி, டி.சரவணன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் தங்கராஜ் மற்றும் டார்வின், அருண்குமார் உள்ளிட் டோர் நினைவஞ்சலி செலுத்தினர்.