ஈரோடு, டிச.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் தோழர் ஏ.எம். காதர் நினைவு தினம் ஈரோடு மாவட் டத்தில் பல்வேறு பகுதிகளில் அனு சரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பின ராகவும், சத்தியமங்கலம் தாலுகாச் செயலாளராகவும், மலைவாழ் மக் கள் சங்கததின் மாநிலத் தலைவரா கவும் செயல்பட்டு வந்த தோழர் ஏ.எம்.காதரின் நினைவு தினமான புத னன்று ஈரோடு மாவட்டக்குழு அலு வலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.பழனிசாமி, ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணியன், பி.சுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோன்று, சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்திலும், சமநகரி லும் படம் வைத்து மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மூத்த தோழர் க.இரா.திருத் தணிகாசலம், மாவட்டக்குழு உறுப் பினர் கே.எம்.விஜயகுமார், தாலுகாச் செயலாளர் எம்.முருகன், நகர கிளைச் செயலாளர் பி.வாசுதேவன். எஸ்.ஏ.ராம்தாஸ் மற்றும் உக்கரம் செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட திரளானோர் பங்கேற்றனர். புளியம்பட்டி அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி.ராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளி சங்கத்தின் மாவட்ட துணைச்செயலா ளர் ஆர்.ரமேஷ், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் வட் டார கமிட்டி செயலாளர் ஜி.சரவ ணன், அனைத்து வகை ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தலைவர் காசி விசுவநாதன் மற்றும் கமிட்டி செயலாளர் டி.சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.