நாமக்கல், ஆக.7- முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் புதனன்று அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளை யத்தில் அமைதி ஊர்வலம் புதனன்று நடைபெற்றது. அந்த அமைதி ஊர்வலமானது ஆனங்கூர் பிரிவு சாலையில் தொடங்கி, சேலம் முதன்மை சாலை, பள்ளிபாளையம் பிரிவு சாலை, வழியாக குமாரபாளையம் திமுக கழக அலுவலகம் முன்பு முடிவடைந்தது. பின்னர் அங்கு மேடை அமைத்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்விற்கு மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் நடன சபாபதி தலைமை வகித்தார். இதில், தெற்கு ஒன்றியச் செயலாளர் நாச்சிமுத்து, வடக்கு ஒன்றியச் செயலாளர் தள பதி செல்வம், குமாரபாளையம் நகர வடக்கு திமுக செயலா ளர் விஜய கண்ணன், பள்ளிபாளையம் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், நகரச் செயலாளர் ஞானசேகரன் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் கழகங்களை சார்ந்த திமுக நிர்வாகிகள் திர ளானோர் கலந்து கொண்டனர்.