கோவை, பிப்.5- ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அள விலான சிலம்பம் போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட கோவை மாவட்ட வீரர்கள் 21 தங்கப் பதக்கங்களை வென்ற னர். யூத் கேம் சிலம்பம் பெட்ரேசன் ஆப் இந்தியா சார்பாக, ஹரியானா மாநிலத்தில் தேசிய அளவிலான சிலம்பம், யோகா, கால் பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடை பெற்றன. தேசிய அளவில் நடைபெற்ற இப் போட்டியில் கேரளா, தமிழ்நாடு, தெலுங் கானா, ஆந்திரா, கர்நாடகா ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனை கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் சார்பாக கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த ரௌத்ரா சிலம்பம் அகாட மியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலம் பம் மற்றும் யோகா போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர். சப்-ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் சீனி யர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இதில் தொடுமுறை, ஒற்றை மற்றும் இரட்டை கம்பு, வாள் வீச்சு என அனைத்து பிரிவிகளிலும் நடைபெற்ற போட்டியில், கோவையில் இருந்து சென்ற 27 மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். 21 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங் களை குவித்து, கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. இதில் பயிற்சியாளர்கள் வெங்க டேஷ், வினோத் குமார், சூரியநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.