கோவை, டிச.21- மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாட்டையொட்டி கோவையில் பாலின சமத்துவ நடை நிகழ்வு வெள்ளியன்று இரவு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாவட்ட மாநாடு ஞாயிறன்று (இன்று) துவங்க உள்ளது. இம்மாநாட்டை யொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன. இதன்தொ டர்ச்சியாக, பாலின ஒடுக்கு முறைக ளுக்கு எதிராக, சமத்துவத்தை முன் னிறுத்தி பாலின சமத்துவ நடை நிகழ்வு நடைபெற்றது. கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் இருந்து துவங்கி காந்திபுரம் பெரியார் சிலை முன்பு உறுதி மொழியோடு நிறைவு பெற்றது. முன்னதாக, இந்த பாலின சமத்துவ நடை நிகழ்விற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி தலைமையேற்றார். மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன் துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா ஒருங்கி ணைப்பில், பெண் ஆளுமைகளின் புகைப்படங்களை கைகளில் ஏந்தி, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர். ஜமாப் மேளம் முழங்க, வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட் டும், காந்திபுரம் முக்கிய வீதிகள் வழியாக பாலின சமத்துவத்தை வலியுறுத்தி முழக்கங்களோடு ஆட் டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு நடைபெற்ற ஊர்வலம் பொதுமக் களை வெகுவாக கவர்ந்தது.