districts

img

கோவை: “ஓம் க்ரீம்! ஐஸ்க்ரீம்!” நூல் வெளியீடு

கோவை, ஜூன் 11- கோவையில் “ஓம் க்ரீம்! ஐஸ்க்ரீம்!”  என்ற தலைப்பில், மாணவர்களுக்கு கற் பதில் உள்ள சிரமங்களை களைந்திட உதவிடும் வகையிலான நூல் வெளி யிடப்பட்டது. எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் கே.கணேஷ், தமிழ்நாடு முழுவதும் பய ணித்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க, அரசு பணிகளுக்கு மாணவர்கள் சேர சிறப்பு பயிற்சிகள் கொடுத்து வருகி றார். தான் சென்ற கல்வி நிலையங் களில் சந்தித்த மாணவர்களின் கற்றல் திறன்கள் மற்றும் அவர்களின் சிரமங் கள் உள்ளிட்ட அனுபவங்களை “ஓம் க்ரீம்! ஐஸ்க்ரீம்!” என்ற தலைப்பில் புத்தகமாக்கி உள்ளார். இந்நிலையில், கோவை - அவிநாசி சாலை, அண்ணா  சிலை அருகில் உள்ள அர்த்ரா ஹாலில், நடைபெற்றது.  எல்ஐசி ஊழியரான சி. விஜயலட்சுமி வரவேற்றார். உயர் கல்வி பயிலும் மாணவர்கள் நூலை வெளி யிட,  மாணவர்கள் பெற்றுக்கொண்ட னர். இந்நிகழ்ச்சியில், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் கே.சுவாமிநாதன், தீக்கதிர் மதுரைப்பதிப்பின் செய்தி ஆசி ரியர் ப.முருகன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி  மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் சுரேஷ், யு.கே.சிவஞானம், அஜய்குமார், கோவை மாவட்ட அரசு வேலை வாய்ப்பு இணை இயக்குநர் லதா, தணிக்கையாளர் பெருமாள் உட்பட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாண வர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில், நூலின் ஆசிரி யர் கே.கணேஷ் நன்றி கூறினார்.