districts

img

அனைத்து வார்டுகளிலும் பெண்கள் மாமன்ற உறுப்பினராகும் காலம் வரும்

கோவை, மார்ச் 11– கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும், பெண்கள் மாமன்ற உறுப்பி னராகும் காலம் வரும் என, மாதர் சங்கத் தின் சார்பில் நடத்தப்பட்ட மகளிர் தின கருத் தரங்கில் கோவை மேயர் கல்பனா தெரி வித்துள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில் 111 ஆவது சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் கோவை ஆவாராம் பாளையத்தில் வியாழனன்று நடைபெற்றது. ரெட்ரோஸ் மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் 28 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜே.கண்ணகி தலைமை வகித்தார். மாதர் சங்க சிங்கை  நகரப் பொருளாளர் வி.மரகதம் வரவேற்பு ரையாற்றினார். இக்கருத்தரங்கில், அதிக ரித்து வரும் பாலியல் வன்கொடுமை களை தடுத்து நிறுத்த வேண்டும். பணியி டங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட் டத்தின்படி விசாகா கமிட்டிகளை அமைக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேயர் கல்பனா பேசுகையில், கோவை மாநகராட்சியின் மேயராக என்னை முனமொழிந்து தேர்வு  செய்திட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறேன். இதேபோன்று எனது 19 ஆவது வார்டில் வெற்றிபெற வைத்த மக்க ளுக்கும், உடன் உழைத்திட்ட திமுக உள் ளிட்ட கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொது வாகவே பெண்கள் தங்களின் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்தும், அதன் தேவை குறித்தும் அறிந்து வைத்தி ருப்பார்கள். சமூகத்தின் வளர்ச்சி மாற்றத் தில் பெண்களின் பங்கு அளப்பறியதாக இருக்கும்.  இந்நிலையில் தான் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தற் போது கோவை மாநகராட்சியில் 100 மாமன்ற உறுப்பினர்களில் 54 பெண்கள் மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். சரிபாதிக்கும் அதிகமாகவே கோவை மாநகராட்சியில் பெண்கள் மாமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். 100 வார்டுகளிலும் பெண் களே மாமன்ற உறுப்பினராகும் காலம் வெகுதொலைவில் இல்லை. அத்தகைய முன்னேற்றத்திற்காக பொது வாழ்வில் பெண்கள் தங்களை இணைத்துக்  கொள்ள வேண்டும், என்றார். முன்னதாக, கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் கல்பனாவிற்கு மாதர் சங்கத்தினர் கௌரவிப்பு செய்தனர். இந் நிகழ்வில் மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்ட செயலா ளர் ஏ.ராதிகா, பொருளாளர் சி.ஜோதி மணி மற்றும் நிர்வாகிகள் எஸ்.சரஸ்வதி, டி. சுமதி, வி.ஆண்டாள், பி.அமுதவள்ளி, டி.தன லட்சுமி, ஆர்.வனஜா, டி.சுதா உள்ளிட்ட திர னானோர் கலந்து கொண்டனர். நிறை வாக, எம்.அமுதா நன்றி கூறினார்.