கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தொகுதி வாரியாக காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்ட 11464 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், மற்றும் விவி பேட் இயந்திரங்கள் பாதுக்காப்பட்ட அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரங்கள், மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு தனித்தனியாகத் துணை இராணுவம் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நேற்று இரவு முதல் நடைபெற்று வருகிறது. மொத்தமாக 10 தொகுதிக்குத் தேவையான 3719 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3719 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 4026 விவி பேட் இயந்திரங்கள் என 11464 துணை இராணுவம் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட அறையில் பூத் வாரியாக இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டு, இயந்திரங்கள் சரி பார்க்கப்படுகிறது. இதையடுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் அறைகள் மூடி சீல் வைக்கப்படுகிறது. அதே போல வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றன.