பெயரளவில் கடன் வழங்கிய கூட்டுறவு சங்கம்: இழப்பீடு வழங்க உத்தரவு
நாமக்கல், ஜூன் 25- நகைகளைப் பெற்றுக்கொண்டு சேமிப்புக்கணக்கில் பெயரளவில் கடன் வழங்கிய கூட்டுறவு சங்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வாடிக் கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், செங்கப் பள்ளியைச் சேர்ந்தவர் யோகேஸ் வரன் (52). இவர் காதப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நகைகளை அடமானம் வைத்து ரூ.1.15 லட்சம் கடன் கேட்டுள்ளார். நகைகளைப் பெற்றுக்கொண்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள், அவருக்கு ரொக்க மாக பணத்தை தராமல் அவரது சேமிப்பு கணக்கில் பணத்தை வரவு வைத்துக்கொடுத்துள்ளனர். இத னிடையே, 2021 ஆம் ஆண்டில் கூட் டுறவு சங்கத்தில் வழங்கப்பட்ட நகைக்கடன் அனைத்தையும் கடன் நிவாரண திட்டத்தின் கீழ், அரசு தள் ளுபடி வழங்கியுள்ளது. ஆனால், யோகேஸ்வரன் பெயர் பயனாளி கள் பட்டியலில் இணைக்கப்படாத தால், நகைக்கடன் தள்ளுபடி செய் யப்படவில்லை. இதனால், கூட்டு றவு சங்கத்தின் மீதும், கூட்டுறவு துறையின் இணைப்பதிவாளர் மற்றும் துணைப்பதிவாளர் மீதும், யோகேஸ்வரன் கடந்தாண்டு நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். நகைகளைப் பெற்றுக்கொண்டு அந்தத் தொகையை சேமிப்பு கணக் கில் வைத்திருந்ததால், வழக்கு தாக்கல் செய்தவரை நகைக்கடன் தள்ளுபடிக்கான பயனாளிகள் பட்டியலில் சேர்க்க விதி இல்லை. இதனால், தாங்கள் சேவை குறை பாடு புரியவில்லை என்று கூட்டுறவு சங்கமும், கூட்டுறவு துறை உயர் அலுவலர்களும் விசாரணையின் போது நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பி னர் ஆர்.ரமோலா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், கூட்டுறவு சங் கத்தில் பணம் கையிருப்பு இல்லா மல், வாடிக்கையாளரிடம் நகை களை அடமானமாகப் பெற்று, கடன் தொகையை சேமிப்புக்கணக் கில் பெயரளவில் வரவு வைத்துக் கொடுத்திருப்பதும், வாடிக்கையா ளர் பணத்தை எடுக்க சென்ற போது பணம் இல்லை என சங்கத் தில் தெரிவிக்கப்பட்டதால், கடன் பெற்றவர் பணத்தை எடுக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளதும் விசார ணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் கையிருப்பு இல்லா மல் பெயரளவில் கடன் வழங்கிய கூட்டுறவு சங்கத்தின் செயல் சேவை குறைபாடு என்றும், இதற்கு இழப்பீ டாக நான்கு வார காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்தவர்க ளுக்கு, ரூ.50 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. மேலும், கடன் தள்ளுபடி செய் வது அரசின் கொள்கை முடிவு என்பதால், கடன் தள்ளுபடி செய் யாததை சேவை குறைபாடு என கூற முடியாது. அரசு அலுவலர்களான கூட்டுறவு துறை இணைப்பதிவா ளர் மற்றும் துணைப்பதிவாளர் ஆகி யோர், வழக்கு தாக்கல் செய்தவ ருக்கு சேவை வழங்கும் பணியினை புரிபவர்களும் அல்ல. வழக்கு தாக்கல் செய்தவர், அவர்களுக்கு நுகர்வோரும் அல்ல என்றும் தீர்ப் பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலர்கள் மீதான புகாரை தள்ளுபடி செய்து மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது.
நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தல்
தருமபுரி, ஜூன் 25- நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் எடை சரியாக உள்ளதா என் பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில், 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவி லான 4 ஆம் காலாண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு, கண் காணிப்பு குழுக்கூட்டம் திங்களன்று நடை பெற்றது. ஆட்சியர் கி.சாந்தி தலைமை வகித் தார். இக்கூட்டத்தில், தேசிய உணவுப் பாது காப்புச் சட்டம் - 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப்பாதுகாப்பு சட்டம் – 2017இன்படி, பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித் தும், தரமானப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், எண்ணெய் மற்றும் பருப்பு உரிய காலத்திற் குள் அனைத்து நியாய விலைக்கடைகளுக் கும் கொண்டு சென்று விநியோகம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் அத்தியாவசிய பொருட்களின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையுள்ள மாதங் களுக்கான குடிமைப்பொருட்கள் தேவை யின் அடிப்படையில் 100 சதவிகிதம் முன் நுகர்வு செய்யப்பட வேண்டும் எனவும், தரம் மற்றும் எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்ய துறை அலுவலர்களுக்கு அறிவுத்தப் பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ் குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) செ.நர்மதா, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் எம்.யசோதா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் (கூ/பொ) எஸ்.மலர்விழி, நுகர்ப் பொருள் வாணிபக்கழக மண்டலச் மேலா ளார் வ.தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாராய விற்பனையில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி கைது
சேலம், ஜூன் 25- ஆத்தூர் அருகே சாராய விற்பனை யில் ஈடுபட்டிருந்த அதிமுக முன்னாள் நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 40 லிட்டர் சாரா யத்தை பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணா புரத்தில் விஷச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது சம் பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும், இடது சாரிகள் உள்ளிட்ட இயக்கங்கள், கள் ளச்சாராயத்திற்கு எதிராக போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது கடும் நடவடிக் கையை போலீசார் மேற்கொண்டு வரு கின்றனர். தீவிர சோதனையிலும் ஈடு பட்டுள்ளனர். இதனிடையே, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல் லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (எ) சுரேஷ்குமார் (40). முன்னாள் அதி முக நிர்வாகி மற்றும் பிரபல சாராய வியாபாரியான இவர் மீது, ஆத்தூர் நகர மற்றும் ஊரக காவல் நிலையம், கெங்க வல்லி காவல் நிலையம், மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 40க்கும் மேற் பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ஆத்தூர் ஊரக காவல் துறையினர் கல்லாநத்தம் பகுதி யில் செவ்வாயன்று தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, அவ்வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த சுரேஷ்குமாரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, சாக்கு மூட்டையில் 40 லிட்டர் கொள்ள ளவு கொண்ட கள்ளச்சாராயத்தை பாக் கெட்டுகளில் அடைத்து விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. சாராய பாக்கெட்டுகளை காவல் துறையினர் ஆய்வு செய்தபோது, ஒரு விதமான விஷத்தன்மை இருந்ததால், சுரேஷ்குமாரை விசாரித்துள்ளனர். அப் போது சுரேஷ்குமார், அதிக போதைக் காக உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும், கரு ஊமத்தங்காயை அரைத்து, அதன் சாற்றை கள்ளச்சாரா யத்தில் கலந்து இருப்பதாகவும் தெரி வித்துள்ளார். இதனால் அதிர்ச்சிய டைந்த போலீசார் சாராயத்தை பறி முதல் செய்து, சுரேஷ்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து ஆத்தூர் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத் தனர். இதனிடையே, சுரேஷ் (எ) சுரேஷ் குமாருக்கும், அதிமுகவிற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என அக்கட்சி யின் ஆத்தூர் ஒன்றியச் செயலாளர் சேகர் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் ஜமாபந்தி துவங்கியது
தருமபுரியில் ஜமாபந்தி துவங்கியது தருமபுரி, ஜூன் 25- தருமபுரி மாவட்டத்தில் 3 நாட்கள் நடைபெறும் ஜமா பந்தி நிகழ்ச்சி, செவ்வாயன்று துவங்கியது. தருமபுரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) செவ்வாயன்று துவங்கி யது. அதன்படி, தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற ஜமாபந்தியில், தனித்துணை ஆட்சியர் தனப்பிரியா கலந்து கொண்டார். இந்நிகழ்வில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட் பிரிவு பட்டா மாறுதல், வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச்சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர். தருமபுரி வட்டாட்சி யர் ஜெயசெல்வம், சமூகநலத்துறை தனி வட்டாட்சியர் சிவக் குமார், வருவாய் அலுவலர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட அதி காரிகள் கலந்து கொண்டனர்.
நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50% மானியம்
நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50% மானியம் திருப்பூர், ஜூன் 25- திருப்பூர் மாவட்டத்தில், 2024 – 25 ஆம் நிதியாண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவ 50% மானியம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகர ணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு), மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50% மானியம் ரூ.1,56,875 மாநில அரசால் வழங்கப்ப டும். இத்திட்டத்தின் மீதமுள்ள 50% பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூல மாகவோ பயனாளி திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிக் கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக் கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையி லிருந்து இலவசமாக வழங்கப்படும். பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தர மாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற் றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன் னுரிமை வழங்கப்படும். 2022 - 23 மற்றும் 2023 – 24 ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனா ளிகளோ அவர்களின் குடும்பத்தினரோ பயனடைந்திருக்கக் கூடாது. கட்டுமானப்பணிகள், தீவனம் மற்றும் உபகரணங் கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பய னாளியால் செய்யப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் நபர் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற் கான சிட்டா / அடங்கல் நகல் 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்ப தற்கான உறுதிமொழி, 2022 - 23, 2023 – 24 ஆம் ஆண்டுக ளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடைய வில்லை என்பதற்கான சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும். மேற்படி திட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள வர்கள் தங்களுக்கு அருகாமையிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுக வேண்டுமாறு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணபிக்க ஜூலை 19 கடைசி தேதி
குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணபிக்க ஜூலை 19 கடைசி தேதி திருப்பூர், ஜூன் 25- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் 2 மற்றும் குரூப் 2 எ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணைய குரூப் 2 மற்றும் குரூப் 2 எ தேர்வுகளுக் கான அறிவிக்கையில், குரூப் 2 பதவிக்கு 507 காலிப்பணியி டங்களும், குரூப் 2 எ பதவிக்கு 1820 காலிப்பணியிடங்களும் என மொத்தமாக 2327 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான கல்விதகுதி அங்கீ கரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 19. இக்காலிப்பணியிடங் களுக்கான முதல்நிலைத்தேர்வு செப்டம்பர் 14 ஆம் தேதி நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணைய குரூப் 2 மற்றும் குரூப் 2 எ தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் உடும லைப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள எக்ஸ்டன் சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் கூடுதல் பயிற்சி மையத்தில் ஜூலை 1 ஆம் தேதி காலை 10 மணியளவில் தொடங்கப்பட வுள்ளது. என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு திருப்பூர், ஜூன் 25- திருப்பூர் வேங்கிபாளையம் அடுத்த சூரியநல்லூர் கிரா மத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் வேங்கை பாளையம் அடுத்து உள்ள சூரியநல்லூர் பகுதியில் 6 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் புதி தாக டாஸ்மாக் கடை அமைக்க டாஸ்மார்க் நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது புதிதாக கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் டாஸ்மார்க் கடை அமையும் பட்சத்தில் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கும். எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சியை மிரட்டியவர் கைது
சாட்சியை மிரட்டியவர் கைது கோவை, ஜூன் 25- கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக் கூடாது என கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்த னர். கோவை மாவட்டம், புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் செலின்(68). இவரது மகன் லியோ மார்ட்டின் கடந்த 2019 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இன் பேன்ட் ராஜ் மற்றும் சண்முகம் (எ) விக்கு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று செலின் தனது சகோதரி மக னுடன், புலியகுளம் பகுதியில் உள்ள கடைக்கு இருசக் கர வாகனத்தில் கடைக்கு சென்று கொண்டு இருந்தார். அப் போது, அவரை சண்முகம் வழிமறித்து தகராறில் ஈடுபட் டார். மேலும், கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி சொல் லக் கூடாது என கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து செலின் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் பேரில், போலீசார் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து அம்மன்குளம் கந்தசாமி லே-அவுட்டை சேர்ந்த சண்முகம் (எ) விக்கு (25) என்பவரை கைது செய்தனர்.
கள்ளச்சந்தையில் வெளிமாநில மது விற்பனை 1,382 மது பாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது
கோவை, ஜூன் 25- பொள்ளாச்சி பகுதியில் கள்ள சந்தையில் வெளிமாநில மதுவினை விற்பனை செய்த 9 பேரை கைது செய்த போலீசார் 1,382 மதுபாட் டில்களை பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சா ராயம் அருந்தி 57 பேர் உயிரிழந்தனர். இதை யடுத்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அம லாக்க பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மதுவி லக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நி லையில், கடந்த ஞாயிறன்று பொன்னாபுரம் பிரிவில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட வெளி மாநில 822 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட செந் தில்குமார், விக்னேஷ் பிரபு, ஆனந்த் குமார் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலத் திலிருந்து வெளிமாநில மது பாட்டில்களை கடந்தி வந்து பொள்ளாச்சியில் கள்ளச் சந்தை யில் விற்பனை செய்து வந்ததும், இதில் பல பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந் தது. இதுகுறித்த தேடுதலில், திங்களன்று பொள்ளாச்சி ராம் நகர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 500 வெளி மாநில மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர். மது பாட்டிலில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்த, விஜய், முருகன், முத்துப்பாண்டி, கார்த்தி, முகமது யாசிப், சிவா உள்ளிட்ட ஒன்பது பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
பழுதடைந்த காரை விற்பனை செய்தவருக்கு அபராதம் கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
கோவை, ஜூன் 25- பழுதடைந்து இருந்த காரை விற் பனை செய்தவருக்கு ரூ.1.15 லட்சம் அபராதம் விதித்து கோவை நுகர் வோர் குறை தீர் ஆணையம் செவ்வா யன்று உத்தரவிட்டு உள்ளது. கோவை மாவட்டம், ராஜ வீதி யைச் சேர்ந்தவர் சரவணன்(38), கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 1 ஆம் தேதி யன்று புகார் அளித்து இருந்தார். அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட கார்கள் விற் பனை செய்யும் முகவரும், ஓட்டுநரு மான ஜி.ஆர்.அரவிந்த் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டுவதால் கிடைக்கும் பணப் பலன் கள் குறித்து கூறினார். அதற்கு கார் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்ற போதும், அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகத் தெரி வித்தார். இதைத் தொடர்ந்து, சுண்டக் காமுத்தூரைச் சேர்ந்த பிரசாந்த் என்ப வரின் கார் நல்ல நிலையில் இருப்பதா கவும், அதன் விலை ரூ.8 லட்சம் என் றும் தெரிவித்தார். இதையடுத்து அந்த பணத்தை கொடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த காரை வாங்கினேன். ஆனால், கார் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனை சரி செய்த பின்னரே இயக்க முடியும் என்று ஓட்டு நர் தெரிவித்தார். இது குறித்து அரவிந்திடம் கேட்ட போது முறையா கப் பதில் அளிக்கவில்லை. பின்னர், காரை பழுது பார்ப்ப தற்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவா னது. எனவே, பழுதடைந்த காரை நல்ல நிலையில் இருப்பதாகக் கூறி மோசடி செய்த அரவிந்த் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தெரி விக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப் பித்த உத்தரவில், பழுதடைந்த காரை நல்ல நிலையில் இருப்பதாகக் கூறி விற்பனை செய்த கார் முகவர் அர விந்த், சரவணனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகை ரூ.5 ஆயிர மும் சேர்த்து ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தர விட்டார்.
உதவி செய்வது போல் திருட்டு
உதவி செய்வது போல் திருட்டு கோவை, ஜூன் 25- ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி வடமாநில வாலிபரிடம் ரூ.25 ஆயிரம் மற்றும் 2 செல்போனை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிலாந்தர் (35). இவர் கோவையில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார். அவர் சொந்த ஊர் செல்வதற்காக டிக்கெட் முன் பதிவு செய்வதற் காக சம்பவத்தன்று கோவை ரயில் நிலையம் வந்தார். அப் போது, ரயில் நிலையம் முன்பு நின்று இருந்த நபர் ஒருவர் பிலாந்தரிடம் சென்று டிக்கெட் எடுத்து தருவதாக தெரிவித் துள்ளார். இதனை நம்பியை அவர் அந்த வாலிபருடன் நடந்து சென்றார். அப்போது அந்த மர்ம நபர் திடீரென பிலாந்தரி டம் இருந்த ரூ. 25 ஆயிரம் மற்றும் 2 செல்போனை பறித்து சென்றார். இதனால், அதிர்ச்சி அடைந்த பிலாந்தர் இது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, உதவி செய்வது போல் நடித்து பணத்தை பறித்து சென்ற நபரை தேடி வருகின்ற னர்.
பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை
ஈரோடு, ஜூன் 25- சத்தியமங்கலம் முகமதியர் துவக்கப்பள்ளி குழந்தை களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்ட, பள்ளி குழந்தைகளுக்கு தீத்தடுப்பு, தீப்பி டித்தால் வகுப்பறைகளில் இருந்து குழந்தைகளை எப்படி வெளியேற்றுவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி, தீயணைப்பு மீட்பு பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார் பில் சத்தியமங்கலம் முகமதியர் துவக்கப்பள்ளியில் திங்க ளன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி பள்ளி குழந்தைகள் முன் செய்து காண்பிக்கப்பட்டதால் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற் பட்டது. மேலும் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சத்தியமங்கலம் தீய ணைப்புத்துறையினருக்கு பொதுமக்கள், பெற்றோர்கள் தரப் பில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கஞ்சா விற்ற போலீஸ் கைது
கஞ்சா விற்ற போலீஸ் கைது உதகை, ஜூன் 25- உதகை பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற நபரை போலீ சார் கைது செய்தனர். விசாரணையில் இவரும் போலீஸ் என் பது தெரியவந்தது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சவுந்தரராஜன் (29), கடந்த, 2020ம் ஆண்டு பழனி பட்டாலியனில், 14 ஆவது பிரி வில் பணியில் சேர்ந்தார். கடந்த சில மாதங்களாக பில்லூர் அணையில் பாதுகாப்பு பணியில் பணிபுரிந்து வந்தார். இவர் தேனியிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வந் துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று தேனியில் இருந்து கஞ்சா கொண்டு வந்து, ஊட்டி பேருந்து நிலையத்தில் விற்க சுற்றி கொண்டிருந்தார். ரோந்து பணியில் இருந்த ஊட்டி ஜி1 எஸ்.ஐ., பிரகாஷ் சந்தேகத்தின் பேரில், சவுந்தர்ராஜனை விசா ரித்தார். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தே கமடைந்து சோதனையிட்டார். பையில், 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததை அடுத்து கஞ்சாவை பறி முதல் செய்தார். ஜி1 இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமை யில் விசாரணை மேற்கொண்டு சவுந்தரராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கட்டடம் இல்லாமல் அவதிப்படும் அங்கன்வாடி மையம்
ஈரோடு, ஜுன் 25 - நசியனூர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட கட்டடம் இடமில்லா ததால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள் ளனர். நசியனூர் பேரூராட்சியில் 14 ஆவது வார்டுக்குட்ட பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. சிந்தன் குட்டை காலனி, நெசவாளர் காலனி மற் றும் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்காக இம்மையம் செயல் படுகிறது. மையத்திற்கென தனி கட்ட டம் இல்லை. தமிழ்நாடு அரசு தொலைக் காட்சி வைப்பதற்காக கட்டிக் கொடுக் கப்பட்ட அறையில் சில காலம் குழந்தை களுக்கான மையம் செயல்பட்டது. குறு கிய அந்த இடத்தில் தொடர்ந்து செயல் பட முடியாது என்பதால் அருகில் ஒரு வீட்டிற்கு மையம் இடம் பெயர்ந் தது. நிர்வாகம் வழங்கிய ரூ.950 வாடகை யாக அதற்கு வழங்கப்பட்டது. ஒரு சிறு வரவேற்பறை, அடுத்து அதைவிட சற்று பெரிய அறை இதுதான் குழந்தை களுக்கான மையம். இதில் குழந்தை கள் வந்தவுடன் பாட்டு பாட வேண்டும். விளையாட வேண்டும். மதிய உணவு உண்ண வேண்டும். சிறிது நேரம் ஓய் வெடுக்க வேண்டும். மேசை, நாற்காலி கள் போட முடியாது. அதற்கு மேல் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வைத்து விளையாட போதுமான இடம் இல்லை. இந்நிலையில், அந்த வீட்டை காலி செய்யுமாறு அதன் உரிமையாளர் தெரி வித்து விட்டார். அங்கிருந்து வெளியேறி னால் மையம் எங்கே செயல்படுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதியில் இருந்த வார்டு உறுப்பினர் தங்கவேலு கூறியதாவது, இரண்டு குடியிருப்புகளுக்கும் நடுவில் அரசு நிலம் உள்ளது. அதனை சுற்றுச் சுவர் கட்டி பாதுகாத்து வருகிறோம். இதில், பூங்காவிற்கு என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் பூங்கா அமைக்க முடியாது. ஏனெனில் அதில் பெரும்பகுதி பாறைகள் நிறைந் ததாக உள்ளது. எனவே, அதனை வகை மாற்றம் செய்து குழந்தைகள் மையம் கட்டலாம் எனக் கூறினார்.
கிணற்றில் விழுந்து ஒருவர் பலி
கிணற்றில் விழுந்து ஒருவர் பலி சேலம், ஜூன் 25- கிணற்றுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்படாததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாநகராட்சி, 58 ஆவது வார்டுக்குட்பட்ட மூணாங்கரடு, பகத்சிங் நகர் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சங்கர் திங்களன்று இரவு அப்பகுதியிலுள்ள பொது கிணற்றின் திட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். இதையடுத்து அவரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லாமல், சங்கர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில், இந்த கிணற்றைச்சுற்றி பாது காப்பு வளையம் மற்றும் வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால், வேலி அமைக்காததாலேயே தற்போது இளைஞர் ஒருவர் உயிரி ழந்துள்ளார் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
குப்பைகளை கொண்டு வந்த லாரி சிறைபிடிப்பு
நாமக்கல், ஜூன் 25- தனியார் நிலத்தில் நகராட்சி குப்பை களை கொட்ட வந்த லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத் தினர் பேச்சுவார்த்தைக்கு பின்பு லாரியை விடுவித்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளை யம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுக ளிலும் தினசரி மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பெற்று வருகின்றனர். பெறப்படும் குப்பைகள் தினசரி நாள் ஒன்றுக்கு ஆறு டன் முதல் 10 டன் வரை உள்ளது இந்த குப்பைகளை சேகரிக்க குமாரபா ளையம் நகராட்சியில் கிடங்கு இல்லை. இதனால் ஆங்காங்கே உள்ள தனியார் மற்றும் அரசு நிலங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலை யில் குமாரபாளையம் பகுதிகளில் குப்பை கொட்ட இடம் ஏதும் இல்லாத காரணத்தினால், நகராட்சி ஊழியர்கள் குமாரபாளையம் அருகே உள்ள மேட் டுக்கடை என்னும் பகுதியில் தனியா ருக்கு சொந்தமான நிலத்தில் குப்பை களை கொட்டி தீ வைத்து எரிய விடு கின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் மூச்சு திணறல் மற்றும் சுவாசக் கோளாறு தொற்று நோய் என தங்கள் பகுதிகளில் பரவி வருவதாக கூறி குமாரபாளையம் நகராட்சி லாரியின் மூலம் குப்பைகளை கொட்ட சென்ற லாரியையும் ஊழியர்களையும் மக்கள் சிறை பிடித்ததுடன் லாரியின் சக்கரங்க ளில் இருந்து காற்றை பிடுங்கி விட்டனர். மேலும் அங்கு உள்ள குப்பை களை அனைத்தும் அள்ளிச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். இதைய டுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேசி இரண்டு நாட்களில் அந்த பகுதி தூய்மைப்படுத்தி தருவதாக உறுதி அளித்ததில் கிராம மக்கள் வாகனத்தை விடுவித்தனர்.
பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு
பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு சேலம், ஜூன் 25- வலசையூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. சேலம் மாவட்டம், வலசையூர் பகுதியிலுள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சிஆர்ஒய் தொண்டு நிறுவனம் சார்பில், ‘பெண் குழந்தைகளின் கல்வியே நாட்டின் வளர்ச்சி’ என்ற தலைப்பில் செவ்வாயன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மக்கள் அறக்கட்டளை இயக்குநர் ஜெயம், பணியாளர்கள் பாரதி, உமாராணி, தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டு, பெண் குழந்தை களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிஆர்ஒய் தொண்டு நிறுவனம், நாடு முழுவ தும் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 7 வார பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக பணியாளர்கள் தெரி வித்தனர்.
வாலிபர் சங்கம் தலையீட்டால் தீர்வு
வாலிபர் சங்கம் தலையீட்டால் தீர்வு கோவை, ஜூன் 25- அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவரை 11 ஆம் வகுப்பில் சேர்க்க ஆசிரியர்கள் மறுத்த நிலையில் வாலிபர் சங்கத்தின் தலையீட்டால் அதே பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். கோவை மாவட்டம், கீரணத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ். இவர் கோவில்பாளையம் அரசு பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 212 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில், 11 ஆம் வகுப்புக்கு அதே பள்ளியில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பித்த போது குறைவாக மதிபெண் இருந்ததாக கூறி அவரை பள்ளி நிர்வா கம் சேர்த்துக் கொள்ள மறுத்துள்ளது. இதனையடுத்து, தன்னை அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள அனுமதி கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உதவியுடன் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று மனு அளித்தார். மேலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கள், மாணவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி பள்ளி ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை யடுத்து, பள்ளி நிர்வாகம் அந்த மாணவனை 11 ஆம் வகுப் பில் சேர்த்துக் கொள்ள ஒப்புக்கொண்டது.