districts

img

தூய்மைப்பணியை தனியாருக்கு விடும் அரசானையை ரத்து செய்.!

சேலம், ஜூலை 22- உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி மற்றும் இதர பிரிவு பணிகளை தனியாருக்கு விடும் அரசாணையை ரத்து செய்ய வலி யுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட் சித் துறை ஊழியர் சங்கத்தினர் திங்களன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நகராட்சி பேரூ ராட்சி நிரந்தர தொழிலாளர்களுக்கு பணிவரன் முறைப்படுத்தப்பட்டு முறையான ஊதிய விகிதத்தில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பண பலன்களை வழங்கிட வேண் டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வருங் கால வைப்பு நிதி பணி கருவிகள் பாதுகாப்பு சாதனங்கள் முறை யாக அமல்படுத்துவதை உத்தவா தப்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பாடுபட்ட அனைத்து உள் ளாட்சி பணியாளர்களுக்கும் மூன்று மாத ஊக்கத்தொகை ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சேலம் கோட்டை மைதானத் தில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சேலம் மாவட்ட ஊரக  வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந் தன் தலைமை ஏற்றார். இதில் சங்கத் தின் தலைவர் எஸ்.கே. தியாக ராஜன், மாவட்டப் பொருளாளர் இளங்கோ, மாவட்ட துணைச் செய லாளர் சி. கருப்பண்ணன் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, சிஎஸ்கே மாவட்ட நிர்வாகி  செம்பன், சங்கத்தின் துணைச் செய லாளர் ராஜா சரோஜா, பானு, மேட் டூர் நிர்வாகி முருகானந்தம் மற்றும்  தூய்மைப் பணியாளர்கள் திரளா னோர் பங்கேற்றனர்.  கோவை இதேபோன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், கோவை மாவட்ட ஊரக  வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர்கள் சங்கத்தின் துணைத்தலை வர் டி.ரவிச்சந்திரன், மாவட்டத்  தலைவர் ராஜகனி, பொதுச்செய லாளர் ரத்தினகுமார், மாவட்ட நிர் வாகிகள் பாபு நன்றி கூறினார்.  ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி, சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.ராஜன் உரையாற்றினார். இதில், திரளானோர் பங்கேற்றனர்.   நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர்கள் மற்றும் சம்மேளன சிஐ டியு தொழிற்சங்கம் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் திங்களன்று நடை பெற்றது. இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி  உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளன தலைவர் கண்ணன் தலைமை ஏற்றார். இதில் மாவட்டத் தலைவர் எம்.அசோகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச் சாமி, மாநிலத் துணைத் தலைவர்  எல்.ஜெயக்கொடி ஆகியோர் உரையாற்றினர். சங்க நிர்வாகிகள்  எஸ்.மலர்க்கொடி, பிச்சைமணி,  விஜயா, ரஞ்சித், அம்பிகா உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.