தாராபுரம், அக்.30- தாராபுரத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உடன டியாக போனஸ் வழங்க வலியுறுத்தி பொதுத் தொழிலாளர் சங்கம் சிஐடியூ சார்பில் திங்க ளன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் துணைத் தலைவர் கண்ணு சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், தாராபுரம் வட்டாரத்தில் இயங்கி வரும் நெல்விதை உற்பத்தி நிறுவனங்கள், டிபார்ட்மெண்டல ஸ்டோர், உணவகம், இரும்பு மற்றும் ஜவுளி நிறுவனங்கள், ரைஸ் மில், ஒர்க் ஷாப், பனியன் மற்றும் பஞ்சாலை நிறுவனங்கள், பேக்கரி, அச்சு, பிளக்ஸ், மர வேலை, தனியார் மோட்டார் தொழில், தனி யார் மருத்துவமனை, தனியார் பள்ளிகள், பெட்ரோல் பங்க், கேஸ் விநியோகம், சுமைப் பணி தொழிலாளர்கள், கைத்தறி நெசவு, துப் புரவு ஒப்பந்த தொழிலாளர்கள், அரசு மருத்து வமனை ஒப்பந்த பணியாளர்கள், தனியார் நிறுவன பாதுகாவலர்கள், கட்டுமானம், காற் றாலை, ஸ்விக்கி, ஜொமோட்டா, கூரியர் சர் வீஸ் மற்றும் உள்ள அனைத்துவகை தொழி லாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இன்னும் போனஸ் வழங்கப்படாதது குறித்து அரசு நடவ டிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு போனஸ் கிடைத்திட செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதில், சங்கத்தின் செயலாளர் பி.பொன் னுச்சாமி, சிபிஎம் தாலுக்கா செயலாளர் என். கனகராஜ், பொருளாளர் கோவிந்தராஜ் மற் றும் நிர்வாகிகள் மேகவர்ணன், சீரங்கரா யன், பட்டு ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.