மேட்டுப்பாளையம், ஜூலை 27- பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள மதுக்கடைகளை மாற்றி யமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் அடங்கிய மனுவினை, மேட்டுப் பாளையத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் சிஐடியு நிர் வாகிகள் வழங்கினர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் தமிழக அரசின் சார்பில் ‘மக் களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம் வெள் ளியன்று நடைபெற்றது. இம்முகாமில், மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தினர், பொதுமக்களுக்கான பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மனு அளித்த னர். அதில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக அமைந் துள்ள மதுபானக் கடைகளை மாற்றிய மைக்க வேண்டும். பழுதடைந்துள்ள பவானி ஆற்றுப்பாலத்தை சீர மைக்க வேண்டும். பழமை வாய்ந்த கல் லார் பழப்பண்ணையை மாற்றக்கூ டாது. கோத்தகிரி சாலையில் உள்ள வேழம் உயிரியல் பூங்காவை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண் டும். மேட்டுப்பாளையம், உதகை மற் றும் காரமடை சாலைகளில் நெடுஞ் சாலை துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றிய போது ஏற்பட்ட சாலைகளின் இருபுறமும் பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள கட்டிடக் கழிவுகளை அப் புறப்படுத்த வேண்டும். அரசால் ஏழை எளிய பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களுக்கான இடத்தினை அள வீடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள் ளன.