districts

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூடுதல் போனஸ்: பனியன் தொழிலாளர்களுக்கு வழங்க சிஐடியு கோரிக்கை

திருப்பூர், செப். 23 – அத்தியாவசியப் பொருட்களின் விலை வாசி கடுமையாக உயர்ந்து வரும் நிலையில்,  அதற்கேற்ப கூடுதல் போனஸ் தொகையை பனியன் தொழிலாளர்களுக்கு வழங்க வேண் டும் என்று சிஐடியு பனியன் தொழிலாளர் சங் கம் கோரியுள்ளது. திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் பனி யன் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி  தலைமையில் பனியன் தொழிலாளர் சங்க நிர்வாகக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் உள்பட  நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள்: பனியன் தொழிலாளர்களுக்கு நடப்பு ஆண்டுக்கான போனஸ் தொகையை,  தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வரு வதைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக தீபா வளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்ன தாக வழங்க வேண்டும். பீஸ் ரேட் மற்றும்  காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு அவர்கள்  செய்த வேலைக்கு ஏற்ப சதவிகித அடிப்படை யில் கணக்கிட்டு போனஸ் வழங்குவதை, முதன்மை வேலை அளிப்பவர் என்ற முறை யில் பனியன் கம்பெனி நிர்வாகம் உத்தரவா தப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக் டோபர் முதல் வாரத்தில் திருப்பூரில் தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவது என்றும், போனஸ் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்து வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஒப்பந்த சம்பள உயர்வு

பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள  உயர்வு ஒப்பந்தப்படி, வரும் அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து அனைத்துத் தொழி லாளர்களுக்கும் அடிப்படைச் சம்பளத்தில் 5  சதவிகிதம் உயர்வு மற்றும் பஞ்சப்படி ரூ.185,  பயணப்படி ரூ.25 சேர்த்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இந்த ஊதிய உயர்வை அனைத்து பனியன் தொழிலாளர்கள் சம் பந்தப்பட்ட கம்பெனி நிர்வாகங்களிடம் கேட் டுப் பெற வேண்டும் என்றும் சிஐடியு கேட்டுக்  கொள்கிறது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் திருப்பூர்  முழுவதும் ஏரியா மகாசபைக் கூட்டங்களை நடத்துவது, சம்பள உயர்வு மற்றும் போனஸ்  கோரிக்கையை அனைத்துப் பகுதி தொழி லாளர்களிடமும் விரிவாகப் பிரச்சாரம் செய் வது என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.