கோவை, ஜன.7- கட்டுமானத் தொழிலா ளர்களுக்கு பொங்கல் பண் டிகை தொகுப்பில் வேட்டி, சேலையுடன் ரூ. 5000 தமிழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு கட்டு மானத் தொழிலாளர் சங்கத் தினர் செவ்வாயன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதந் தோறும் ஓய்வூதியம் ரூ.3000 வழங்க வேண் டும். பொங்கல் பண்டிகை தொகுப்பில் வேட்டி, சேலையுடன் ரூ.5000 தமிழக அரசு வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலா ளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும். வாரியப் பதிவு ஆன் லைன் முறையில் மிகவும் எளிமையாக்க வேண்டும். பணப்பயன்களை இரு மடங் காக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க கோவை மாவட்டத் தலைவர் கே. மனோகரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படை, நான்கு ரோடு பகுதி யில் திங்களன்று மாலை நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிஐடியு கட்டுமானத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்திரமதி மற்றும் ஏரா ளமான கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.