நாமக்கல், ஜூலை 9 – இருசக்கர வாகனத்தில் பின் னால் அமர்ந்து சென்று கொண்டி ருந்த முதியவரின் கைப்பையில் இருந்து 500 ரூபாய் பணத்தாள்கள் சாலையில் சிதறியது. இதனை கவ னிக்காமல் சென்ற முதியவரை விரட்டி பிடித்து, சிதறிய பணத்தை சேகரித்து முதியவரிடம் பொதுமக் கள் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி ஏரி சாலையில், இரு சக்கரத்தின் பின்னால் அமர்ந்து சென்ற வயதான முதியவர் பையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் தாள்கள் சாலை முழுவதும் சிதறியது. இதை பார்த்த வாகன ஒட் டிகள் சிலர் வேகமாக சென்று புதிய பஸ் நிலையம் அருகே நிறுத்தி, விப ரங்களை சொல்லி அழைத்து வந்த னர். இதனிடையே, சாலையில் சித றிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுக்களை அப்பகுதியில் இருந்த ஏராளமான பொதுமக்கள் சேகரித்து வைத்திருந் தனர். பின் முதியவர் வந்தவுடன் அவ ரிடம் ஒப்படைத்தனர். சிதறிய பணத் தில் ஒரு தாளைக்கூட யாரும் எடுத்து மறைத்து வைக்காமல் ரூ.2 லட்சம் பணத்தையும், முதியவரிடம் ஒப்ப டைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்ப டுத்தியது. இதுகுறித்து அந்த முதியவர் கூறு கையில், ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வங்கியில் பணத்தை செலுத்துவதற்கு வந்த தாகவும், சாலையில் இருசக்கர வாக னத்தில் வந்த இளைஞரிடம் லிப்ட் கேட்டு வந்தபோது பையை பக்கவாட் டில் மாட்டியிருந்த நிலையில் சைலன் சர் வெப்பத்தில் பை ஓட்டையாகி அதில் இருந்த இரண்டு லட்ச ரூபாய் பணமும் சாலையில் கொட்டியதாக தெரிவித்தார். பணம் கொட்டிய விஷயமே தனக் குத் தெரியாத நிலையில் தன்னை பின் தொடர்ந்து வந்த நபர்கள் விவரம் கூறி அழைத்து வந்ததால், பறிபோன பணம் முழுவதும் தமக்கு மீண்டும் கிடைத்ததால் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொண்டு கூட எனக்கு கொடுங்கள் என கூறியது பொதுமக்கள் அனை வரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி யது. அவரை சமாதானப்படுத்திய பொதுமக்கள் அவரை பத்திரமாக செல்லுமாறு அறிவுறுத்திச் சென்ற னர்.