திருப்பூர், செப்.29- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், நத்தக்காடையூர் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 2,592 வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் பரிசுத்தொகையாக ரூ.51.84 லட்சம் மதிப் பீட்டிலான காசோலைகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனியன்று வழங்கி னர். திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் 19070, கல்லூரி மாணவ, மாணவியர்கள் 3510, அரசு ஊழி யர்கள் 1887, பொதுப்பிரிவு ஆண்கள் பெண்கள் 1918, மாற்றுத் திறனாளிகள் ஆண்கள், பெண்கள் 198 என மொத்தம் 26,583 நபர்கள் இணைய தளத்தில் பதிவு செய்திருந்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் 11,607, கல்லூரி மாணவ, மாணவியர்கள் 1,926, அரசு ஊழியர்கள் 634, பொதுப்பிரிவு ஆண்கள், பெண்கள் 1,012. மாற்றுத்திறனாளிகள் ஆண்கள், பெண்கள் 113 என மொத்தம் 15,292 நபர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் முதல் இடத்தில் 864 நபர்களும், இரண்டாமிடத்தில் 864 நபர்களும், மூன்றாமிடத் தில் 864 நபர்களும் என மொத்தம் 2,592 வீரர் வீராங்கனை கள் வெற்றி பெற்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் பரிசுத்தொ கையாக முதலிடம் பெற்றவருக்கு ரூ.3 ஆயிரம், இரண்டாமி டம் பெற்றவருக்கு ரூ.2 ஆயிரம், மூன்றாமிடம் பெற்றவருக்கு ரூபாய் ஆயிரம் என அவரவர் வங்கிக் கணக்கில் மொத்தம் பரிசு தொகையான ரூ.51.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு சனியன்று தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பரிசு தொகையை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாம்சாந்தகுமார், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், தலைவர், (ஈரோடு பில்டர் எஜுகே ஷன் டிரஸ்ட், காங்கேயம் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்) என். ராமலிங்கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகு குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.