ஈரோடு, ஜூலை 26- மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக பிரதமர் மோடியை கண்டித் தும், மணிப்பூர் முதல்வரை பதவி விலக வலியுறுத்தியும் ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் சிஐடியு, தவிச, அஇவிதொச மற்றும் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன், விதொச மாவட்டத் தலைவர் கே.ஆர்.விஜயராகவன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன், நகரச் செயலாளர் பி. சுந்தரராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். முடி வில், சிஐடியு மாவட்ட உதவிச் செய லாளர் வி.பாண்டியன் நன்றி கூறி னார். இதேபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந் துறை புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பெருந்துறை தாலுகாச் செயலாளர் பி.முத்துபழனிசாமி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. பரமசிவம் மாவட்டக்குழு உறுப்பி னர் வி.ஏ.விஸ்வநாதன், விவசாயி கள் சங்கம் தாலுகா குழுத் தலை வர் கே.குப்புசாமி, சிஜடியு தாலுகாச் செயலாளர் எஸ்.என்.மயில்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசை பதவி விலக கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஈரோடு, வெண்டிபாளை யத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித் தார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் கே.ராஜ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பா. லலிதா, பி.ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப் பாட்டத்தின் நிறைவாக மாரிமுத்து நன்றி கூறினார். இதேபோன்று, மணிப்பூர் வன் முறையைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவ லகம், நம்பியூர் வட்டாட்சியர் அலு வலகம், பெருந்துறை வட்டாட் சியர் அலுவலகம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கொடுமுடி வட்டாட்சியர் அலுவ லகம், ஈரோடு வட்டக்கிளையின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ராக்கிமுத்து, செயலாளர் ச. விஜயமனோகரன், பொருளாளர் ஆர்.சுமதி மற்றும் மாநில துணைச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட துறைவாரியான சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், திர ளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி
மணிப்பூரில் நடைபெறும் வன் முறையை தடுக்க தவறிய பாஜக அரசு பதவி விலகக்கோரி புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.சிசு பாலன், எம்.முத்து, சோ. அருச்சுணன், எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவநாதன், ஆர்.மல்லிகா, ஆர்.சின்னசாமி, ரவி, நகரச்செய லாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர்கள் தருமபுரி என். கந்தசாமி, நல்லம்பள்ளி ஒன்றி யச்செயலாளர் எஸ்.சின்னராஜ், பாலக்கோடு டி.எஸ்.ராமச் சந்திரன், அரூர் பி.குமார், பாப்பி ரெட்டிப்பட்டி தி.வ.தனுசன், இண்டூர் ராஜா உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.
கோவை
மணிப்பூர் மாநில பாஜக அரசு பதவி விலக கோரி கோவை துடிய லூரில் சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்க பொதுச்செயலாளார் சி.துரைசாமி தலைமை தாங் கினார். இதில், சிஐடியு மூத்த தலை வரும், முன்னாள் சட்டமன்ற உறுப் பினருமான யு.கே.வெள்ளியங்கிரி தலைவர் எஸ்.பி.சுப்பிரமணியம், பொருளாளர் ஏ.ஜி.சுப்பிரமணி மற்றும் ஆர்.கேசவமணி, வி.பெரு மாள் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். இதேபோன்று, மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை தூண்டிவிட்ட பாஜக அரசை கண்டித்து, திராவிடர் தமிழர் கட்சி சார்பில், அதன் தலைவர் வெண் மணி தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜோதி குமார் உள்ளிட்டோர் உரையாற் றினர். இதில், திரளானோர் பங்கேற் றனர்.
சேலம்
மணிபூரில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி செவ் வாயன்று சேலம் மாவட்ட ஒருங்கி ணைந் நீதிமன்றத்தின் நுழை வாயில் முன்பு பெண் வழக்கறி ஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வழக்கறிஞர் தேவி ரமணி தலைமை ஏற்றார். இதில் தமயந்தி, கலைச் செல்வி, புனிதா, கல்பனா, உமா, மகேஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இப்போராட் டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் பொன்.ரமணி, மாசிலாமணி, வழக்கறிஞர்கள் இமயவர்மன், வெற்றிவேல், நரேஷ் பாபு மற்றும் திரளான பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.