districts

img

சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாணிக்க விழா கொண்டாட்டம்

தருமபுரி, மே 19- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தின் 40 ஆம் ஆண்டு மாணிக்க விழா தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் கொண்டாடப்பட்டது. சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாணிக்க விழாவின் ஒருபகுதியாக, தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கொடியேற்றி கொண்டாடப்பட் டது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் ஒன்றி யத் தலைவர் எம்.ஜெயந்தி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் எம்.ராமன் சங்கத்தின் கொடியை ஏற்றி  வைத்தார். இதில் ஜாக்டோ - ஜியோ மாவட்டப் பொருளாளர் கே.புகழேந்தி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வளர்மதி, ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் ஏ.பெரு மாள், எம்.கோவிந்தன், ஆர்.ராமன்,  கே.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவில் வட்டத் தலைவர் ஆர்.துரை சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஒன்றியப் பொருளாளர் பழனி யம்மாள், துணைத்தலைவர் சுமதி, இணைச்செயலாளர் சக்தி, முன்னாள்  மாவட்டத் தலைவர் சி.காவேரி ஆகி யோர் கலந்து கொண்டனர். காரியமங் கலத்தில் ஒன்றியத் தலைவர் வெங்கட் ராமன் தலைமையில், மாவட்டத் தலை வர் தேவகி சங்கத்தின் கொடியை ஏற்றி  வைத்து உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர். கடத்தூரில் ஒன்றியத் தலை வர் ரோஜா கொடியேற்றி வைத்தார். ஒன்றியச் செயலாளர் தங்கராஜ் சிறப்பு ரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.

;