கோவை, டிச.15- புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். கோவையில் ஆண்டுதோறும் மிகப்பெரிய மாரத் தான் போட்டி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு ‘கோயம்புத்தூர் மாரத்தான் - 2024’ எனும் மாரத்தான் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் அத னால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து, போட்டியில் பங்கேற்ற னர். கோவை வ.உ.சி மைதானம் அருகிருந்து துவங்கி இப்போட்டியானது 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக் கான ரிலே ஓட்டம் என நான்கு பிரிவுகளில் நடத்தப் பட்டன. 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர். முடிவில், வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங் கப்பட்டன.