கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் பங்கேற்பு
கோவை, நவ.23- துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் உரம் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்த ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உட் பட அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். கோவை துடியலூர் பகுதியில் கடந்த 1955 ஆம் ஆண்டு 13 வருவாய் கிராமங்களை யும், 56 குக்கிராமங்களையும் செயல் எல்லை யாகக் கொண்டு துவங்கப்பட்ட டியூகாஸ் நிறு வனம். விவசாயிகளுக்கு தேவையான பல் வேறு உரங்களை உற்பத்தி செய்து, தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் குறைந்த விலைக்கு விற்று வந்தது. பல லட்சம் விவ சாயிகளுக்கு உரங்களை அளித்து வந்த ஆசியாவிலேயே மிகப் பெரிய விவசாய கூட்டுறவு சங்கமான டியூகாஸ் நிறுவனத்தின் உர உற்பத்தி உரிமத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
இதனை கண்டித்து கோவை யில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். துடியலூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் ஒன் றிய செயலாளர் எம்.மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மாவட்ட செயலாளர் சி.பத்மநா பன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை யாற்றினர். இதில், தனியார் நிறுவனங்களின் லாபத் திற்காக ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. விவசா யிகளின் தோழன் என வாய்கிழிய பேசும் மோடி அரசு, மறுபுறம் விவசாயிகளின் வாழ் வாதாரத்தில் மண் அள்ளிப்போட்டு வருவ தாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ் சாட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. அஜய்குமார், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பி.வி.மணி, விகே.எஸ்.கே.செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் எஸ்.ராமமூர்த்தி, மதிமுக வெ.சு.சம் பத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராக வன், கொமதேக பரமேஷ்வரன் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் திரளாக பங்கேற்று ஒன்றிய பாஜக அரசிற்கு எதிரான முழக்கங் களை எழுப்பினர்.