districts

img

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 21- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய அஞ்சல், ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய அஞ்சல், ஆர்எம் எஸ் ஓய்வூதியர் சங்க ஈரோடு கோட்ட 6 ஆவது மாநாடு ஈரோடு பெரியார் மன்றத்தில் ஞாயிறன்று, கோட்டத் தலைவர் ஆர்.சுப்பிரமணி யன் தலைமையில் நடைபெற்றது. புரவலர் பி.நல்லதம்பி முன்னிலை யில், உதவித்தலைவர் டி.கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார். ஆண்டறிக்கை, நிதி நிலை அறிக்கையைத் தொடர்ந்து சகோதர சங்க நிர்வா கிகள் எஸ்.கருணாநிதி, என்.குப்புசாமி, என்.மணிபாரதி, கே.குப்பு சாமி, பி.ஜெகநாதன், வி.பன்னீ ர்செல்வம், கே.கோபிநாத், பி.கணே சன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாள ரும், அகில இந்திய தலைவருமான கே.ராகவேந்திரன் சிறப்புரையாற்றி னார். இம்மாநாட்டில், 8 ஆவது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்றவர்க ளுக்கு உரிய எம்ஏசிபி வழங்க வேண்டும். மாதாந்திர மருத்துவப் படியை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பணமில்லா சிகிச் சைப்பெற மாவட்டத்திற்கு ஒரு மருத் துவமனைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கம்முடேசன் பிடித்தம் காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படியை உடனடி யாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத் தின் கோட்டத் தலைவராக ஆர்.சுப்பி ரமணியன், கோட்டச் செயலா ளராக என்.ராமசாமி மற்றும் பொரு ளாளராக வி.கே.பழனிவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.