கோவை, டிச.23- சிபிஎம் கோவை மாவட் டச் செயலாளராக சி.பத்ம நாபன் தேர்வு செய்யப்பட் டார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு ஞாயிறு மற்றும் திங்கள் இரண்டு நாட்கள், வரத ராஜபுரம் சாய்விவாஹா மஹாலில் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, வி.ஆர்.பழனிச் சாமி, சுதா ஆகியோர் தலை மையில் நடைபெற்றது.
மாநாட்டில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பி னர் என்.குணசேகரன் உள் ளிட்ட தலைவர்கள் பங் கேற்றனர்.
தீர்மானங்கள்
அமைதியான சூழலில் உள்ள கோவையில் திட்ட மிட்டு வகுப்புவாத மோதலை உருவாக்கும் நோக்கில் பாஜக உள்ளிட்ட இந்துத் துவ அமைப்புகள் செயல் படுவதை தடுத்து நிறுத்திட, மக்களை திரட்டி தொடர் இயக்கங்களை முன்னெ டுப்பது, கோவையில் தனி யார் தொழில் நிறுவனங்க ளில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு நியாயமான ஊதியமும், சட்ட பாதுகாப் பும், இஎஸ்ஐ மற்றும் பிஎப் உள்ளிட்ட உரிமைகள் வழங்க வேண்டும். தொழில் முனை வோரை பாதிக்கும் ஜிஎஸ் டியை ரத்து செய்ய வே;ண டும். குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். பாரதியார் பல் கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி, இழப் பீடு வழங்க வேண்டும். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைக ளில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத் துவ மாணவர்கள் ஆகியோ ருக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில் 41 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழுவும், சி.பத்மநாபன், ஏ. ராதிகா, எஸ்.கிருஷ்ண மூர்த்தி, கே.மனோகரன், கே.அஜய்குமார், கே.எஸ். கனகராஜ், வி.தெய்வேந்தி ரன், என்.ஆர்.முருகேசன், ஆர்.கோபால், வி.ஆர்.பழ னிச்சாமி, என்.ஆறுச்சாமி, வி.சுரேஷ், வி.இராமமூர்த்தி ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களும், மாவட் டச் செயலாளராக சி.பத்ம நாபன் தேர்வு செய்யப்பட்ட னர்.