districts

img

ஈரோட்டில் புத்தகத் திருவிழா துவங்கியது

ஈரோடு, ஆக.3- தமிழ்நாடு அரசு, மக்கள் சிந்த னைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா வெள்ளி யன்று துவங்கியது. தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்த னைப் பேரவை இணைந்து நடத்தும், ஈரோடு புத்தகத் திருவிழா - 2024, வெள் ளியன்று ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் துவங்கியது. இதன் துவக்க விழாவிற்கு ஈரோடு மாநக ராட்சி ஆணையர் என்.மனிஷ் தலைமை வகித்தார். தமிழக அரசின் பொது நூலகத்துறை இயக்குநர் கே.இளம்ப கவத் கலந்து கொண்டு, புத்தக அரங்கை திறந்து வைத்து பேசுகையில், இந்த ஈரோடு புத்தகத் திருவிழாவை தொடர்ந்து 20 ஆண்டுகளாக நடத்தி வரு வது மிகவும் பாராட்டுக்குரியது. ஒரு புத் தகக் கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருவதென்பது சாதாரண விஷய மில்லை. அறிவுத்தேடலிலும், வாழ்க் கையின் முன்னேற்றத்திற்கும் புத்தகங் கள் வாசிப்பு முக்கியமானது, என்றார். இதைத்தொடாந்து, உலகத்தமிழர் படைப்பரங்கை திறந்து வைத்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்எல்ஏ பேசுகையில், வாழ்க்கையில் முன்னேற புத்தக வாசிப்பு என்பதும் அத்தியாவசி யமான ஒன்று. இன்றைய காலகட்டத் தில் புத்தக வாசிப்பும், பத்திரிகை களை படிப்பதும் குறைந்து வருகிறது. இளைய தலைமுறையினர் பெரும்பா லும் செல்போனில் மூழ்கி கிடக்கிறார் கள். இந்நிலை மாற வேண்டும். ஒரு சாதாரண மனிதனையும், ஒரு சிறந்த சிந்தனாவாதியாக்கும் சக்தி புத்தகங்க ளுக்கு உண்டு, என்றார். முன்னதாக, இப்புத்தகத் திருவிழா வின் முதல் விற்பனையை தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் மயிலானந்தன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், செயலாளர் ந.அன்பரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.