நாமக்கல், நவ. 9- தீபாவளி போனஸ் பிரச்னையில் தமி ழக அரசு தலையிட வேண்டும் என விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் பகுதியில் ஏராளமான விசைத் தறி தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலை நம்பி பணியாற்றி வருகின்ற னர். இந்நிலையில், இவர்களுக்கு இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் 20% சதம் வழங்கிட வேண்டுமென நாமக் கல் மாவட்ட விசைத்தறி தொழிலா ளர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இதன்தொடர்ச்சியாக பள்ளிப்பாளை யம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வியாழ னன்று நடைபெற்றது. விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி அங்க முத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் எம்.அசோகன், ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துக்குமார், உதவித் தலைவர் கே.குமார், பொருளாளர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர். முன்னதாக, தீபாவளி போனஸ் பிரச் சனையில் தமிழக அரசு தலையிட வேண்டுமெனக் கோரி வருவாய் ஆய் வாளர் ஜெகதீஷிடம் மனு வழங்கினர்.