districts

img

போனஸ் கோரிக்கை: தூய்மைப் பணியாளர்கள் கைது

கோவை, அக்.18- போனஸ் கேட்டு 3 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடு பட்ட தூய்மைப் பணியா ளர்கள் வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர். கோவை மாநகராட்சி யில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்க ளுக்கு, தீபாவளி போனஸாக 2000 ரூபாய் 2,500 ரூபாய்  மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு மாத சம்பளத்தை போனஸாக தர வலியு றுத்தியும் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து கடந்த இரண்டு நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டு வந்தனர். இதுகுறித்து கோவை மாநக ராட்சி துணை ஆணையாளரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடருமென்று தூய் மைப் பணியாளர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, வெள்ளியன்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. ஆனால், காவல் துறையினர் அனு மதி மறுத்து தற்காலிக இரும்பு கேட்டை கொண்டு அலுவலக நுழைவாயிலை மறைத் ததால் போராட்டம் மேற்கொள்ள வந்த தூய் மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவல கம் முன்பே கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைய டுத்து காவல் துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.