districts

img

பாரதியார் நினைவு தினம்: தமுஎகச அனுசரிப்பு

அவிநாசி, செப்.11- மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவிநாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம், நல்லது நண்பர் அறக்கட்டளை சார்பில் ஞாயிறன்று பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். மகாகவி பாரதியின் 101ஆவது (செப்டம்பர்.11) நினைவு  தினத்தை நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டன. இதன் ஒரு  பகுதியாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் அவிநாசி கிளை மற்றும் நல்லது நண்பர்கள்  அறக்கட்டளை சார்பில் அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளி யில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணி வித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  இதனைத் தொடர்ந்து பாரதியார் கவிதை குறித்து குழந்தை நிலா, பாரதியை பற்றி மாவட்ட குழு உறுப் பினர் மணிகண்ட பிரபு, பாரதியார் பாடல்களை  குறித்து  இளங்கோ, தூ சே பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  சிலம்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம், மாவட்டத் தலைவர்  பி.ஆர்.கணேஷ், மாவட்டச் செயலாளர் குமார், ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி, ஒன்றிய செயலாளர் தினகரன், ஒன்றிய பொருளாளர் சம்பத், ஒன்றிய நிர்வாகிகள் நீரோடை  மகேஷ், பழனிச்சாமி, நல்லது நண்பர் அறக்கட்டளை நிர்வாகி  ரவிக்குமார் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

;