districts

img

சிபிஎம் கோவை மேற்கு நகரக் குழு செயலாளராக பி.சி.முருகன் தேர்வு

கோவை, டிச.9- மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மேற்கு நகரக் குழு செயலாளராக பி.சி.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை மாவட்ட மேற்கு  நகரக்குழுவின் 24 ஆவது மாநாடு கோவை சாமியார் புது  வீதி கொங்கு மஹால் தோழர் என். சங்கரய்யா நினைவு அரங்கத்தில் ஞாயி றன்று நடைபெற்றது.

இம்மாநாட்டில், மூத்த  தோழர் ஏ.ஆர்.கல்யாணசுந்தரம் கொடியை ஏற்றினார். நகரக் குழு உறுப்பினர்கள் எம்.ராதாகிருஷ்ணன், எம்.கே.முத்துக்குமார், என். பரமேஸ்வரி ஆகியோர் தலைமை வகித் தனர். நகரக் குழு உறுப்பினர் என்.பரமசிவம் வர வேற்புரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கையை மேற்குநகரச் செயலாளர் பி. சி.முருகன் சமர்ப்பித்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கோபால் பேசினார்.

இம்மாநாட்டில், தமிழக அரசு மது விலக்கை தளர்த்தி மது விற்பனையில் ஈடு பட்டு வருகிறது. மது விற்பனையில் எப்எல் 1  முதல் எப்எல் 2 வகையான உரிமைகள் வழங்கி மது விநியோகமும் விற்பனையும் நடைபெறுகிறது. படிப்படியாக மதுவிலக்கு  என்று கூறி, திமுக அரசு 500 மதுக்கடைகளை மூடி, ஆயிரத்துக்கும் மேற் பட்ட தனியார் எப்எல் 2 மதுக் கடைகளை திறந்துள்ளது. எவ் வித விதிமுறைகளும் பின்பற்றா மல் அமைக்கப்பட்டு வரு வதை தமிழக அரசு கைவிட வேண்டும்.

கோவை மாநக ராட்சிக்குட்பட்ட ராஜ வீதி, சிவன்  வீதி, தியாகி குமரன் விதி உள்ளிட்ட மேற்கு நகரப் பகுதிக ளில் உள்ள சாலைகள் பழுதடைந்து குண் டும் குழியுமாக உள்ளதால், போர்க்கால அடிப்படையில்  சாலைகளை பராமரிக்க வேண்டும். வாடகை கட்டிடங்களுக்கு விதிக் கப்படும்  ஜிஎஸ்டி வரியினை கைவிடவும், சிறு,குறு தொழில் நசிவுக்கு காரணமாக உள்ள ஜிஎஸ்டி வரி விதிமுறைகளில் மாற் றம் செய்திட வேண்டும். தங்க நகை தொழிலா ளர்கள் பட்டறை வைப்பதற்கு வளாகம் அமைத்து குறைந்த வாடகைக்கு தர வேண் டும். சிறு பட்டறைகளுக்கு வர்த்தக கட்டணத் தில் உள்ள மின்சாரத்தை குறைந்த கட்டணத் தில் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து, கோவை மேற்கு  நகரக் குழு செயலாளராக பி.சி.முருகன்  மற்றும் 11 பேர் கொண்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ். கிருஷ்ணமூர்த்தி நிறை வுரையாற்றினார். முடிவில், நகரக்குழு உறுப் பினர் கே.செந்தில்பிரபு நன்றி கூறினார்.