கோவை, மே 3- டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்ரீ நல்ல கவுண்டர் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் மேம்பாட்டுக் கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. என்ஜிபி கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் முனை வர் ஓ.டி.புவனேஷ்வரன் தலைமையேற்றார். பயன்பாட்டு அறிவியல் புல முதன்மையர் முனைவர் மீரா ராமன் வர வேற்புரையாற்றினார். முதல்வர் (பொறுப்பு) முனைவர் எஸ். சரவணன் விருது பெற்றவர்கள் குறித்த அறிமுக உரை யாற்றினார். என்ஜிபி கல்வி குழுமங்களின் இயக்குநர் முனைவர் பெ.இரா.முத்துசாமி வாழ்த்துரையாற்றினார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக் கட்டளையின் கல்விசார் செயல்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி சார் செயல்பாடுகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர் களுக்கும், பேராசிரியர்களுக்கும் ஊக்குவிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டது. டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களில் 10,15 மற்றும் 20க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டனர். இந்த நிகழ்வில் கல்லூரியின் கணினி புல முதன்மையர் முனைவர் மேரி மேக்டலின் ஜேன் நன்றியுரையாற்றினார்.