திருப்பூர், பிப். 18 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி வட்டார மூத்த தலைவர்களில் ஒருவ ரான பழங்கரை எம்.பழனிச் சாமி (வயது 73) செவ்வா யன்று உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். தொடக்கத்தில் டிடிபி மில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர். தொழிற்சங்கத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினராகவும், அவிநாசி தாலுகா குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். 1986ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று முறை பழங்கரை ஊராட்சிமன்றத் தலைவராக வெற்றி பெற்று சிறப்புடன் பணி யாற்றினார். அப்போது தூய்மை ஊராட்சி என்ற குடியரசுத் தலைவரின் விருது பழங்கரை ஊராட்சிக்கு கிடைத்தது. இவருக்கு மனைவியும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள் ளனர். செவ்வாயன்று பிற்பகல் ஆத்துப்பாளையம் மின் மயா னத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அங்கு நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில், அவிநாசி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், செ.முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி. முத்துசாமி, மற்றும் சிபிஐ, திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் இரங்கல் உரையாற்றினர்.